பொள்ளாச்சி: மலை ஏற்றத்தின் போது கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் அஜ்சாள் சைன் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த மருத்துவர் அஜ்சாள் சைன்(26) மற்றும் பாத்தில்(27) ஆகிய இருவரும் முறையான அனுமதி பெற்று பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் மலைப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டனர்.அப்போது திடீரென இருவருக்கும் உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனை அறிந்த மலைப்பாதை வழிகாட்டிகள் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அஞ்சாள் சைன் மூச்சு திணறி உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் முறையான விழிப்புணர்வு இன்மையால் மலையற்றத்தின் போது பலரும் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு காரணம் என்ன..?

மலை ஏறும் போது உயரம் கூடும்போது, ஆக்ஸிஜன் அளவு குறையும். இதனால், தலைவலி, வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் வரும். இதனால் நோய் தீவிரமடைந்து, உயிரிழப்பு ஏற்படலாம்.
அதேபோல் மலைகளில் வெப்பநிலை திடீரென மாறும்போத, உடல் உஷ்ணம் குறைதல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
பனி மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால், அது மிகவும் ஆபத்தானது. பனியில் அடிபட்டு காயங்கள் ஏற்படலாம், புயல் காரணமாக வழியில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
குறிப்பாக மாரடைப்பு, வெப்ப அதிர்ச்சி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் மலையேற்றத்தின் போது ஏற்படலாம். இதய நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மலையேற்றம் செய்யக்கூடாது.
மலையேற்றம் செய்ய தேவையான பயிற்சி, உபகரணங்கள் இல்லாதவர்கள் உயிரிழப்புக்கு ஆளாகலாம். உதாரணமாக, சரியான பாதுகாப்பு உபகரணங்கள் (rope, helmet, gloves) இல்லாமல் மலையேற்றம் செய்வது ஆபத்தில் தான் போய் முடியும்.
இறங்கிய வேகத்தில் வேகத்தில் வேகம் எடுத்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?
தேர்தல் களம் காண தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. மதுராந்தகத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!
திருவனந்தபுரம் டூ தாம்பரம்.. அம்ரித் பாரத் ரயில்.. தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
பெண்ணுக்கு பேருதவி.. எது தெரியுமா?
எல்லாமே சக்தி (It's All About Energy)
தைப்பூசமும் வள்ளலாரும்.. உணர்த்தும் அருட் பெரும் செய்தி!
நீதி சொல்ல இத்தனை நூல்களா.. தமிழின் தனிப்பெருமை.. உங்களுக்குத் தெரியுமா?
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
{{comments.comment}}