பொள்ளாச்சி: மலை ஏற்றத்தின் போது கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் அஜ்சாள் சைன் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த மருத்துவர் அஜ்சாள் சைன்(26) மற்றும் பாத்தில்(27) ஆகிய இருவரும் முறையான அனுமதி பெற்று பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் மலைப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டனர்.அப்போது திடீரென இருவருக்கும் உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனை அறிந்த மலைப்பாதை வழிகாட்டிகள் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அஞ்சாள் சைன் மூச்சு திணறி உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் முறையான விழிப்புணர்வு இன்மையால் மலையற்றத்தின் போது பலரும் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு காரணம் என்ன..?

மலை ஏறும் போது உயரம் கூடும்போது, ஆக்ஸிஜன் அளவு குறையும். இதனால், தலைவலி, வாந்தி, மயக்கம், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் வரும். இதனால் நோய் தீவிரமடைந்து, உயிரிழப்பு ஏற்படலாம்.
அதேபோல் மலைகளில் வெப்பநிலை திடீரென மாறும்போத, உடல் உஷ்ணம் குறைதல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
பனி மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால், அது மிகவும் ஆபத்தானது. பனியில் அடிபட்டு காயங்கள் ஏற்படலாம், புயல் காரணமாக வழியில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
குறிப்பாக மாரடைப்பு, வெப்ப அதிர்ச்சி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் மலையேற்றத்தின் போது ஏற்படலாம். இதய நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மலையேற்றம் செய்யக்கூடாது.
மலையேற்றம் செய்ய தேவையான பயிற்சி, உபகரணங்கள் இல்லாதவர்கள் உயிரிழப்புக்கு ஆளாகலாம். உதாரணமாக, சரியான பாதுகாப்பு உபகரணங்கள் (rope, helmet, gloves) இல்லாமல் மலையேற்றம் செய்வது ஆபத்தில் தான் போய் முடியும்.
Sunday Surprise: இயற்கை அன்னையும் மனிதனும்!
GenZ வேற லெவல்தான்.. நிஜ காதலியை விட.. ஏஐ காதலிதான் ரொம்ப பிடிச்சிருக்காம்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
கற்ற கல்வி உதவுமா?
M Bharathi Poem: ஆட்சி!
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
{{comments.comment}}