- ஸ்வர்ணலட்சுமி
கொடுமுடி கோவில் குறித்து இப்போது பார்க்கப் போகிறோம். அந்தக் கோவிலின் புராண வரலாறும்,காவிரி ஆறும் அகத்தியரும் பற்றிய தகவல்களை காண்போம்...
கோவில்களுக்குப் பெயர் போனது தமிழ்நாடும், இந்தியாவும். இங்கு இல்லாத கோவில்களே இல்லை. உலகிலேயே அதிக கோவில்கள் இருப்பது இங்குதான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கோவில் சிறப்பாக உள்ளது. அந்த வகையில்தான் கொடுமுடி கோவிலும் அமைந்துள்ளது.
திருப்பாண்டி கொடுமுடி இத்தலத்தின் பெருமைகளை தொகுத்து வடமொழியிலும்,தென் மொழியிலும் புராணங்கள் உள்ளன.. திருப்பாண்டி கொடுமுடி புராணம் என்னும் நூலில் உள்ள பாடல்களில் இதனைப் பற்றிய வரலாறு உள்ளது. ஆனால் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
கொடுமுடி வரலாறு:

புராண காலத்தில் இந்திரன் சபையில் வாயு தேவனுக்கும், ஆதிசேடனுக்கும் அவர்களுடைய வலிமையை குறித்து வாதம் நிகழ்ந்த போது ஆதிசேடன் மேருமலையின் சிகரங்களை அசையாது சுற்றிக் கொண்டான். ஆனால் வாயு தேவனோ தன்னுடைய வலிமையால் மேருவின் சிகரங்களை மோதி தகர்த்தான். அப்போது அவன் தகர்த்த ஐந்து துண்டுகள்,ஐந்து மணிகளாக,ஐந்து இடங்களில் விழுந்து ஐந்து தலங்கள் உருவாகின என்று புராண வரலாறு கூறுகிறது.
அவைகளில் சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலை ஆகவும், மரகதம் விழுந்த இடம் திருஈங்கோய் மலையாகவும், மாணிக்கம் விழுந்த இடம் ரத்தினகிரி சிவாய மலையாகவும், நீலமணி வீழ்ந்த இடம் திருப்பொதிகை மலையாகவும், ஐந்தாவதாக வைரம் விழுந்த இடம் கொடுமுடியாகவும் அமைந்தன.
கொடுமுடி என்பது பெரிய சிகரம் என்று பொருள்படும். மலைச்சிகரமே மகுடக லிங்கராக அமைந்துள்ளது. மற்ற சிகரங்கள் எல்லாம் மலைகளாக காட்சி,தந்து கொடுமுடி மட்டும் லிங்க வடிவமாக அமைந்துள்ளது. கொடுமுடி ஒரு மலைச்சிகரமாகும். இதற்கு சான்று புராண பாடல்களில் அமைந்துள்ளன.
அகத்தியரும் காவிரியும்:
இமயகிரியில் சிவபிரானுக்கும், பார்வதிக்கும் திருமணம் நிகழ்ந்த போது,தேவர்கள் மானிடர் முதலியார் ஒன்று கூடியதால் வடதிசை தாழ்ந்தது,அதனால் பெருமாள் பூமியைச் சமம் செய்யும்படி அகத்தியரை தென்திசையில் உள்ள பொதிகை மலைக்கு அனுப்பினார். அகத்தியர் தென்திசை வந்து கொங்குநாடு அடைந்து ஒரு மலையில் தங்கி தவம் செய்தார். அகத்தியரின் கமண்டலத்தில் கங்கை நீர் நிறைந்தது.
அப்போது மழை இல்லாமல் போகவே தேவலோகத்தின் தலைவனான இந்திரன், பெருமானிடம் முறையிட்டான். சிவபெருமான் விநாயகரிடம் காக்கை வடிவம் கொண்டு அகத்தியன் கமண்டல நீரை கவிழ்க்கும் படி கட்டளையிட்டார்.அதற்கு பணிந்து விநாயகர் வெள்ளை காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டல நீரை கவிழ்த்தார்.கமண்டல நீரே காவிரி நதியாக ஓடத் தொடங்கியது என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு கவிக்கப்பட்ட இடமே "கொடுமுடித்துறை" என்பர். இவ்விடம் காவிரி தெற்கு நோக்கி வந்து இங்கிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இவ்விடத்தில் காவிரியின் நடுவில் அகத்தியர் பாறை என வழங்கும் பாறையில் இந்த வரலாறை குறிக்கும் திரு உருவங்கள் இன்றளவும் இருக்கின்றன.
மேலும் திருச்சி ஜில்லாவிலும் கல்லணையில் அகத்தியர் கமண்டல நீரை விநாயகர காக்கை வடிவில் நீரை கவிழ்க்கும் சிற்பம் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அதனை இன்றும் காணலாம். இத்தகைய காரணத்தினால் இங்கு உள்ள விநாயகருக்கு "காவிரி கண்ட விநாயகர்" "என பெயர் வந்தது.
காவிரியும் தன் கலைகள் நிரம்பி பெருக்கெடுத்து சோழநாடு அடைந்து சோலைகளின் வழியே பாய்ந்து வளமுற செய்து முடிவில் காவேரிப்பூம்பட்டினம் கடலில் சங்கமம் ஆகிறது. அகத்தியர் விரும்பியபடியே சிவபெருமான் வடிவாம்பிகை அம்மையார் வலத்தில் விளங்க தமது திருமண கோலக் காட்சியை கொடுமுடியில் காட்டி அருளினார். கொடுமுடி கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்களுக்கு என்றும் அருள் பாலிக்கிறார் சிவபெருமான்.
இயன்றவர்கள் ஒரு முறையேனும் கொடுமுடி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}