நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!

Dec 09, 2025,10:22 AM IST

- ஆ.வ. உமாதேவி.


கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட ஒருவன், மருத்துவமனைக்கு சென்றான். அவனை பரிசோதித்த மருத்துவர், காலையில் இரண்டு இட்லி, மத்தியானம் சிறிதளவு மோர் சாதம், இரவில் இரண்டு சப்பாத்தி சாப்பிட்டு இந்த மாத்திரைகளை சாப்பிடுங்க என்றார். நீங்க சொன்னதெல்லாம் வழக்கமான ஆகாரத்துக்கு முன்னாலேயா? பின்னாலேயா? டாக்டர், என்றான். 


அவன், அளவுக்கு அதிகமாக சாப்பிடும் குணம் கொண்டவன் என்பதை அறிந்த மருத்துவர், ஐயா! அளவாய் சாப்பிட வேண்டும் என்று  சொல்ல, அவன், டாக்டர்! சின்ன வயசுல எங்க அம்மா நொறுங்க தின்னவனுக்கு நூறு ஆயுசுடா,  நல்லா சாப்பிடுன்னு சொன்னாங்க. சின்ன வயசிலே சொன்னதை மனதிலே வச்சிக்கிட்டு, நான் வயிற்றுக்கு மட்டும் வஞ்சகம் செய்யாமல், நல்லா சாப்பிடறேன் டாக்டர் என்று சொன்னான். 




நொறுங்கத்தின்பது என்பதற்கு அளவுக்கு அதிகமாக, முடிந்தவரை என்றெல்லாம் தவறான பொருள் கொண்டு, பழமொழியின் உண்மை பொருளை அறியாமல் புரிந்து கொண்ட அவனது அறியாமையை நினைத்து, புன்னகை செய்தார் டாக்டர். ஐயா! நாம் உண்ணும் உணவு வாயில் போட்ட உடனே, அப்படியே செரித்து விடுவதில்லை. வாயில் போட்டவுடன், அங்கு சுரக்கும், உமிழ்நீருடன் சேர்ந்து இரைப்பைக்குச் சென்று, செரிமான உறுப்புகளால் செரிக்கப்பட்டு, வேண்டாத சக்கைகளை வெளியேற்றிவிட்டு, மிகச்சிறிய அளவு உணவையே ரத்தமாக மாற்றி, இதயத்திற்கு அனுப்புகிறது. 


இவ்வாறு நாம் உண்ணும் உணவு தூய ரத்தமாக மாறி உடலுக்கு வலுவும், பொலிவும் தர, நம் உடலில் பல உறுப்புகள் இடைவிடாது இயங்க வேண்டி உள்ளது. ஆனால், நாம் உண்ணும் உணவை நன்றாக மென்று, கூழ் போல கரையும் அளவுக்கு, அதாவது நொறுங்கிப் போகும் அளவுக்கு மென்று உண்டால், செரிமான உறுப்புகளின் வேலைப்பளு குறையும். செரிமான உறுப்புகளின் வேலைப்பளு குறையக்குறைய அவை, நீண்ட காலத்துக்கு பழுதுபடாமல் இயங்கி வரும். அதனால் நம் ஆயுளும் நீளும். இதுதான் "நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு" என்னும் பழமொழியின் உண்மையான பொருள். 


நம் முன்னோர்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து, அதை பழமொழிகளாக நமக்குத் தந்துள்ளனர். அவர்கள் தவறான களைகளை, அறிவு பயிர்களிடையே நிச்சயமாக விதைத்திருக்க மாட்டார்கள். தவறான பொருளை தரக்கூடிய மொழியை நம் முன்னோர்கள் நிச்சயமாக சொல்லி இருக்க மாட்டார்கள். உணவு செரிக்கும் பணியை செய்யும் அத்தனை உறுப்புகளும், ஓய்வு பெற எண்ணியே நம் முன்னோர்கள் கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களை தேர்ந்தெடுத்து, விரதம் கடைபிடிப்பதை வழக்கப்படுத்தினர் என்பதையும் எண்ணிப் பார்த்து, உண்மையை உணர்வோம்.. உடலை பேணி காப்போம்!


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி் பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்