சென்னை: 50 ஆண்டு கால பொது வாழ்க்கையில் இருக்கும் என்னால் அரசு வீட்டிற்கு ஒரு வருடமாக வாடகை கட்ட முடியவில்லை. இதனால் நோட்டீஸ் வந்திருக்கிறது. ஆனால் அண்ணாமலைக்கு மாதா மாதம் பணம் தருகிறார்கள். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது வீட்டு வாடகை, பிற செலவுகளை நண்பர்கள்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். தனது வீட்டு வாடகை 3 லட்சம், கைக் கடிகாரம் ரூ. 3. லட்சம் என்று புள்ளி விவரத்தையும் தெரிவித்திருந்தார்.
இது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. கொரோனா உச்சகட்டத்தில் தாண்டவமாடிக் கொண்டிருந்தபோது, ஏராளமான உயிர்கள் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தபோது இந்த ஆடம்பரமான கைக்கடிகாரத்தை வாங்கியுள்ளார் அண்ணாமலை என்று பலரும் விமர்சித்துக் கொண்டுள்ளனர். அதேபோல அவரது வீட்டு வாடகை குறித்தும், நண்பர்கள் குறித்தும் கூட டிரோல் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டால், அட ஏங்க அவரைப் பத்தியே பேசறீங்க என்று கடுப்பாகி விட்டார். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இதுதொடர்பாக ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், 50 ஆண்டு பொது வாழ்க்கையில் 2முறை சட்டமன்ற உறுப்பினர், 1முறை மக்களவை உறுப்பினர், காங்கிரஸ் தலைவராக இருக்கும் நான், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூ16000 வாடகைக்கு குடியிருக்கிறேன்.
1வருடமாக வாடகை கட்டவில்லை என நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன். ஆனால், 4 ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய பாஜக தலைவர் அண்ணாமலை, மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது? 3 லட்ச ரூபாய் கை கடிகாரமும் எப்படி அணிய முடிகிறது? இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார் அழகிரி.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}