சென்னை: 50 ஆண்டு கால பொது வாழ்க்கையில் இருக்கும் என்னால் அரசு வீட்டிற்கு ஒரு வருடமாக வாடகை கட்ட முடியவில்லை. இதனால் நோட்டீஸ் வந்திருக்கிறது. ஆனால் அண்ணாமலைக்கு மாதா மாதம் பணம் தருகிறார்கள். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது வீட்டு வாடகை, பிற செலவுகளை நண்பர்கள்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். தனது வீட்டு வாடகை 3 லட்சம், கைக் கடிகாரம் ரூ. 3. லட்சம் என்று புள்ளி விவரத்தையும் தெரிவித்திருந்தார்.
இது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. கொரோனா உச்சகட்டத்தில் தாண்டவமாடிக் கொண்டிருந்தபோது, ஏராளமான உயிர்கள் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தபோது இந்த ஆடம்பரமான கைக்கடிகாரத்தை வாங்கியுள்ளார் அண்ணாமலை என்று பலரும் விமர்சித்துக் கொண்டுள்ளனர். அதேபோல அவரது வீட்டு வாடகை குறித்தும், நண்பர்கள் குறித்தும் கூட டிரோல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டால், அட ஏங்க அவரைப் பத்தியே பேசறீங்க என்று கடுப்பாகி விட்டார். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இதுதொடர்பாக ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், 50 ஆண்டு பொது வாழ்க்கையில் 2முறை சட்டமன்ற உறுப்பினர், 1முறை மக்களவை உறுப்பினர், காங்கிரஸ் தலைவராக இருக்கும் நான், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூ16000 வாடகைக்கு குடியிருக்கிறேன்.
1வருடமாக வாடகை கட்டவில்லை என நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன். ஆனால், 4 ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய பாஜக தலைவர் அண்ணாமலை, மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது? 3 லட்ச ரூபாய் கை கடிகாரமும் எப்படி அணிய முடிகிறது? இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார் அழகிரி.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}