மங்கை வந்தாள்!.

Aug 12, 2026,02:44 PM IST

- மும்மொழிக்  கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


மங்கை வந்தாள்!-என் 

மனதை வென்றாள்!-தனைக்

கங்கை என்றாள்!-என்

கனவிலும் வந்தாள்!


தான் தமிழ் தான்

என்றாள்!-உடன் 

தமிழ் அமிழ்தம்

என்றாள்!


தனைப் பாவை என்றாள்!

எனைப்  பார்த்துச் சிரித்தாள்!

தனைக் கோதை என்றாள்!

எனை ரெங்கன் என்றாள்!




தனைக் கோபிகை என்றாள்!

இது கோகுலம் என்றாள்!

விண்ணை அளந்தாள்!

இமை  மெல்லத் திறந்தாள்!


என் கரம் பிடித்தாள்!

மலர் மாலை சூட்டினாள்!

நாட்கள் நகர்ந்தன!

ஆண்டுகள் நகர்ந்தன! 


விரைந்து வந்தது

முப்பத்து ஐந்தாவது 

திருமண நாள்!

இறைவனுக்கு நன்றி!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்