டெல்லி: "லேடி டான், மின்ஸ் மேடம், ரிவால்வர் ராணி".. இதெல்லாம் யார் தெரியுமா.. ஒரே ஆள்தான்.. இப்படி பல செல்லப் பெயர்கள் இருந்தாலும்.. அனுராதா செளத்ரி என்பதுதான் அவரோட ஒரிஜினல் பெயர்.. அவருக்கு இன்னிக்கு காலையில் கல்யாணம் ஆயிருச்சு பாஸ்!
ஒரே தொழிலில் இருப்பவர்கள் கல்யாணம் செய்து கொள்வது சகஜம்தானே.. அதேபோல நம்ம ரிவால்வர் ராணியும், தன்னைப் போலவே ஒரு டானாக வலம் வரும் சந்தீப் எனப்படும் காலா ஜத்தேரி என்ற கேங்ஸ்டரை கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.
டெல்லியில் உள்ள துவாரகா என்ற ஹோட்டலில் வைத்து இந்தக் கல்யாணம் இன்று காலையில் நடந்துள்ளது. இரு டான்களின் சங்கமம் என்பதால் பிரச்சினை ஏதும் வந்து விடாமல் இருக்க போதிய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஆக்சுவலி, நம்ம காலா ஜத்தேரியை திஹார் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். கல்யாணம் செய்வதற்காக அவருக்கு பரோல் கொடுத்து வெளியே கூட்டி வந்திருந்தனர்.

இந்த டான் கல்யாணத்திற்காக ஸ்வாட் சிறப்புப் படையினர், டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு, 3வது பட்டாலியன், 150 முதல் 200க்கும் மேற்பட்ட போலீஸ் படையினர் என ஏகப்பட்ட பேர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். இன்று கல்யாணத்தை முடித்த கையோடு, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள மணமகன் வீட்டுக்கு மணமக்கள் செல்லவுள்ளனர். அங்கு வைத்து மேலும் சில குடும்பச் சடங்குகள் செய்யப்படவுள்ளதாம்.
காலா ஜத்தேரி மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. மிகப் பெரிய கும்பலைச் சேர்த்துக் கொண்டு ஆள் கடத்தல், மிரட்டல், பணம் பறித்தல் என பல்வேறு வகையான கிரைம் செயல்பாடுகளில் ஈடுபட்டவர் ஜத்தேரி. கடந்த 2021ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரில் வைத்து ஜத்தேரியையும், அனுராதாவையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர். பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காலா ஜத்தேரி கும்பலைச் சேர்ந்தவர்தான் அனுராதா. இவர் மீதும் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல், அடிதடி என நிறைய கேஸ்கள் உள்ளன. இவர் தற்போது ஜாமீனில் வெளியேதான் இருக்கிறார். திருமண வைபவங்கள் முடிந்துதம் ஜத்தேரியை மீண்டும் திஹார் சிறையில் போலீஸார் அடைக்கவுள்ளனராம்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
{{comments.comment}}