- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
தென்னகம் பிறந்த
தெய்வமும் இன்று
விண்ணகம் சென்றதுவே!
தேவதை போல்
எமைக் காத்தவர் உயிரினைக்
காலனும் கொய்தனனே!
அன்னையைப் போல் ஒரு
இன்முகம் காட்டிய
மன்னவன் மறைந்தனரே!

கண்களும் இன்று
குளம் என ஆகிக்
குருதியும் வழிகிறதே!
நேர்மையின் தீபம்
நல்லதொரு மனிதர்
இன்றைக்கு மறைந்தாரே!
தேற்றிட யாருளர்?
வாட்டிடும் சோதனை
வாய்மொழி மறந்ததுவே!
காட்டிய அன்பும்
கடமையின் மாண்பும்
கடவுளைச் சேர்ந்ததுவே!
பூட்டிய விழித்திரை
பூமியில் ஆறென
நீரினைச் சுரக்கிறதே!
இதற்குள் அவர் உயிர்
இறைவனும் பறித்தெமை
வாட்டிட விரும்பியதேன்?
இரு விழி ஆறென
நீரினைச் சுரந்து
கடல் மட்டம் உயர்வதும் ஏன்?
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).
அன்பு வைகோவுக்கு.. பதவி திமுகவுக்கு.. மதிமுக எம்எல்ஏ எடுத்த திடீர் முடிவு!
இயக்குநர் கே.பாக்யராஜ்.. ஆயிரக்கணக்கானோரின் அஞ்சலியுடன்.. அரசு மரியாதையுடன் உடல் தகனம்
Tamil Poem: தேற்றிட யாருளர்?
RIP Director K Baghyaraj: திரைவானத் தூறல் தீர்ந்து போச்சு!
பாக்யராஜ் என்கிற பன்முககலைஞர்!
பாக்கியராஜ் என்றும் ஒரு சகாப்தம்!
திரைத்துறையின் பாக்கியமே.. கலைத்துறையின் அதிசயமே!
அரசு மரியாதையுடன் நாளை இயக்குநர் பாக்யராஜின் உடல் தகனம்
முதல்வர் விஜய், உதயநிதி உட்பட 55 எம்எல்ஏ.,க்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு
{{comments.comment}}