சென்னை: பிக் பாஸ் புகழ் லாஸ்லியா கவர்ச்சியான புகைப்படங்களை தனது பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதற்கு வரவேற்பும், பாராட்டும் அள்ளுகிறது.
இலங்கைத் தமிழச்சியான லாஸ்லியா மரியநேசன் 1996 மார்ச் 23ம் தேதி கிளிநொச்சியில் பிறந்தார். திரிகோணமலையில் படித்தவர்.. பிறகு டிவிக்குள் நுழைந்த அவர் அங்குள்ள சக்தி டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார். பிறகு மாடலிங் துறையில் தனது கவனத்தை செலுத்தி வந்த நிலையில்,
பிக் பாஸ் 3ல் பங்கேற்க லாஸ்லியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறந்த போட்டியாளராகவும் விளங்கினார். அனைவரிடமும் கலகலப்பாகவும், அன்பாகவும் இருந்த லாஸ்லியா ஒரு கட்டத்தில் மற்றொரு போட்டியாளரான கவின் உடன் காதல் வயப்பட்டார்.
பிக் பாஸ் சீசன் 3 முடியும் வரை லாட்லியா கவின் காதல் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தது. இவர்கள் வெளிப்படையாகவே ஒருவர் மீது ஒருவர் அன்பைப் பொழிந்தது சலசலப்பையும் ஏற்படுத்தியது. ஆனால் பிக் பாஸ் சீசன் 3 முடிந்த பின்னர் லாஸ்லியா ஒரு பேட்டியில் எங்களின் இருவரின் கருத்துகளும் ஒத்துப் போகவில்லை என தெரிவித்திருந்தார். அத்தோடு காதலும் காலியாகி விட்டது.
அதன் பின்னர் சினிமாவில் நுழைந்தார் லாஸ்லியா. நட்பு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்தார். ஆனாலும் அதன் பின்னர் அவருக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தாலும் விடாமல் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார் லாஸ்லியா.
தனது twitter மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இவரது இன்ஸ்டாகிராமிலும் ஏகப்பட்ட போட்டோக்கள் குவிந்து கிடக்கின்றன.
இதில் இவருக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபேன் பாலோவர்ஸ் உள்ளனர். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
வித்தியாசமான போஸ்களில் உட்கார்ந்தபடி அவர் கொடுத்திருக்கும் விதம் விதமான புகைப்படங்கள் ரசிகர்களை குளிர்விப்பதாக உள்ளது. இவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}