ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், விஜய் இரங்கல்

Dec 14, 2024,08:04 PM IST

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் மறைவுக்கு முதலவர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.


ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடந்த இரண்டு வாரமாக நுரையீரல் சார்ந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சை பலனளிக்காமல்  இன்று காலை 10.28 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு தமிழக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலும், பின்னர் சத்தியமூர்த்தி பவனிலும் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.  பொதுமக்களின் அஞ்சலிக்கு பின் நாளை மின் மயானத்தில்  இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.


இந்த நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:




தந்தை பெரியார், ஈ வி கே சம்பத் ஆகியோரின் பெரும் அரசியல் பாரம்பரிய மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் ஈ வி கே எஸ் இளங்கோவன். எப்போதும் தன் மனதில் பட்டதை பேசக்கூடிய பண்புக்கு சொந்தக்காரர். ஈவிகேஎஸ்  இளங்கோவன் தனது அன்பு மகனை இழந்ததிலிருந்து மனதளவில் மனம் உடைந்து போயிருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று தன் கவலைகளை மீறி பணியாற்றியவர். பல ஆண்டுகாலம் தமிழ்நாடு அரசியலில் முன்னணி தலைவராக விளங்கியவர்.


இளங்கோவன் மறைவு அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் மிகவும் வேதனை தருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் கூட என்னை சந்திக்க வேண்டும் என்றார்


மருத்துவமனையில் நான் சென்று சந்தித்தபோது பேசும் நிலையில் அவர் இல்லை. மருத்துவமனையில் அனுமதித்த நாளிலிருந்து அவரது உடல் நலம் குறித்து அவ்வப்போது கேட்டு அறிந்தேன் என கூறியுள்ளார்.


துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: 


ஈ வி கே எஸ் இளங்கோவன் மறைவு தமிழ்நாடு அரசியல் களத்திற்கே பேரிழப்பாகும். தந்தை பெரியாரின் பேரன் ஈ வி கே எஸ் இளங்கோவன். கலைஞர் மீது மாறா பற்று கொண்டவர். எதையுமே வெளிப்படையாக பேசும் ஆற்றலுக்கு சொந்தக்காரர். நம்முடைய அரசியல் பயணத்தில் வழிகாட்டி ஊக்குவித்த பண்பாளர்.


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றோம். பெரியாரின் பூர்வீக இடத்துக்கான பட்டாவை வழங்கிய போது அவர் வாழ்த்தி பேசியது இன்னும் நம் மனதில் நிழலாடுகிறது எனக்கூறி உள்ளார் 


தவெக தலைவர் விஜய்:


மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். 


அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் டிக்கெட் கட்டணம்.. உங்க ஊருக்கு எவ்வளவு தெரியுமா?

news

என்ன வேணும் உனக்கு.. வாட்ஸ் ஆப் கொண்டு வந்த புது அப்டேட்.. இனி இதையும் பண்ணலாம்!

news

PMK issue: டெல்லி விரைந்தார் அன்புமணி.. அமித்ஷா, நட்டாவை சந்திக்க திட்டமா?.. மீண்டும் பாமக பரபரப்பு

news

கர்நாடக முதல்வரை மாற்ற திட்டமா.. மல்லிகார்ஜூன கார்கே சொன்ன பதில் இதுதான்!

news

Bihar model Road: 100 கோடியில் ரோடு.. ரோட்டு மேல காரு.. காரைச் சுத்தி யாரு?.. அடக் கொடுமையே!

news

ஆதார்-ஐஆர்சிடிசி அக்கவுண்ட் இணைக்க இன்றே கடைசி... தட்கல் டிக்கெட் எடுக்க புதிய ரூல்ஸ்

news

நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது.. குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது: சீமான்!

news

தொடர் குறைவில் தங்கம் விலை.... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

68 ஆண்டுகளுக்குப் பிறகு.. ஜூன் மாதத்தில் 120 அடியை தொட்டு அசத்திய மேட்டூர் அணை!

அதிகம் பார்க்கும் செய்திகள்