Leo release: எல்லா டோரும் குளோஸ்.. 9 மணிக்கே முதல் காட்சி.. தயாரிப்பு நிறுவனம் முடிவு!

Oct 18, 2023,10:26 AM IST

சென்னை: அரசு அறிவித்தபடி லியோ திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. லியோ படத்தின் முதல் காட்சி நாளை காலை 9 மணிக்கு   திரையிடப்படுகிறது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள படம் லியோ. 7 ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார்   லலித் குமார். லியோ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 5 ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்ததே. 




இந்நிலையில் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் லியோ வெளியாக இருக்கிறது. லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும். காலை 9 மணி காட்சிக்குப் பதில்,  7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 


இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், அதிகாலை 4 மணி காட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டது. காலை 7 மணி காட்சியை அனுமதிக்க தமிழ்நாடு அரசு மறுத்து விட்டது. இந்நிலையில், தியேட்டர்களும் காட்சிகளின் நேரத்தை மாற்ற முடியாது என்ற நிலையில்,வேறு வழியில்லாததால் திட்டமிட்டபடி படத்தைத் திரையிட படத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.


லியோ படத்தின் முதல் காட்சி நாளை காலை 9 மணிக்கு தான் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், குழப்பம் நீங்கியதால் தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. லியோ  விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கான படம்  என்ற நிலையில் தமிழகம் முழுவதிலும் விஜய் ரசிகர்கள் வருங்கால முதல்வர் என்றே போர்ஸ்டர் அடித்து லியோ பட ரிலீஸ்சுக்கு என்றி கொடுத்து வருகின்றனர்.


படம் குறித்த எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு படம் வெளிவருவதற்கு முன்னரும், பட ரிலீஸ்சிலும் சர்ச்சைகளும் பஞ்சமே இல்லை எனலாம். லியோ பட ரிலீசில் விதி மீறல்கள் இருந்தால் அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாவட்டந்தோறும் அதிகாரிகள் இப்போதே நடவடிக்கையில் இறங்கி விட்டனர். ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் புகார் கூறுவதற்கான தொலைபேசி எண்களை அறிவித்து வருகின்றனர். 


ஒரு பட ரிலீசில் இந்தளவு பிரச்சனை இருப்பதால்,விஜய் ரசிகர்களை விட பொது மக்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இந்த படத்திற்கு டிக்கெட் முன்பதிவு நடத்து வருகின்ற நிலையில் முன்டியடித்துக் கொண்டு டிக்கட் வாங்கி வருகின்றனர். படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் ரசிகர்களே.......!

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்