- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed
ஏப்ரல் 1 என்றால் நம் நினைவிற்கு வருவது April Fool. சிறு குழந்தையாக இருக்கும் பொழுது நாம் அனைவரும் April Fool சொல்லி விளையாடியது நினைவிற்கு வரும் .இப்படி சிறப்பு வாய்ந்த முட்டாள் தினத்தை கொண்டாடிடுவோம்.
முட்டாள்கள் நாள் (April Fools' Day or All Fools' Day) என்பது ஏப்ரல் முதலாம் நாள் உலகம் முழுவதும் நகைச்சுவைக்காக கொண்டாடப்படும் ஒரு நாளாகும்.
இந்த நாளில் ஒருவரை ஒருவர் நகைச்சுவையாக ஏமாற்றி, பாதிக்கப்பட்டவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்து விளையாடுவது மன மகிழ்ச்சியை தருகிறது. இந்த நாள் 19-ஆம் நூற்றாண்டு முதல் அறியப்பெற்றதாக இருந்தாலும் இன்றைய நாள் வரை நாம் சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.
ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்று சிறப்பு தினம் இல்லை என்றும் கூறுவார்கள். அப்படி நாம் கருதாமல் இன்றைய தினத்தை சிறப்பாக கொண்டாடுவதே நல்லது என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும்.
இன்றைய தினத்தில் வயது வித்தியாசம் பார்க்காமல் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி அவர்களை முட்டாள்கள் என்று சொல்லி அழைப்பதில் நமக்கு சந்தோசம் பொங்கி வழிகிறது. இதற்காகவே நாம் ஒவ்வொரு ஆண்டும் கட்டாயம் இன்றைய நாளை கொண்டாட வேண்டும் .

மார்ச் 31 அன்று வங்கிகளில் பழைய கணக்குகளை சரிபார்த்து ஏப்ரல் 1 அன்று புதிய கணக்குகளை எழுதுவார்கள். இதனால் உலகம் முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை பார்க்கும் பள்ளி குழந்தைகள் தங்களுக்கு மட்டும் விடுமுறை இல்லையா என்று ஏங்கி காணப்படுவார்கள்.
அந்த கவலையை மறப்பதற்கு April Fool சொல்லி ஏமாற்றி விளையாடுவதில் மகிழ்ச்சி அடைந்து விடுகிறார்கள்.
April Fool அனுபவங்கள் :
ஏய் உன் சட்டை கிழிந்து இருக்கு பாரு என்று சொன்னதும் பயந்து போய் பார்ப்போம். உடனே பதில் April Fool.
இன்று பள்ளிக்கு கணித ஆசிரியர் வரவில்லை. -April Fool
அங்கே பாரு பாம்பு -April Fool
சாக்லேட் கவரில் சாக் பீஸ் போன்ற ஏதேனும் ஒரு பொருளை வைத்து மடித்துக் கொடுத்து ஏமாற்றுவது - April Fool.
இதைப் போல் நிறைய நிகழ்வுகளாக குழந்தைகள் யோசித்து தானாகவே தங்கள் பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் நண்பர்களிடமும் ஏமாற்றி விளையாடுவது புத்துணர்ச்சி அளிக்கிறது.
இப்படி ஏமாற்றி விளையாடும் பொழுது சிலர் எதற்கும் நம்பாமல் தன்னை April Fool சொல்லி விடுவார்கள் என்று அறிவாக செயல்படுபவரும் இருப்பார்கள். அவர்களை நாம் இன்றைய நாள் ஏமாற்ற முடியாது. அப்பொழுது நாம் தான் ஏமாந்து விடுவோம். நமக்கே அது April fool ஆக முடிந்து விடுகிறது .
இந்த நாளை சிறப்பாக அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அருள் தமிழ் இலக்கியம், மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}