- க.யாஸ்மின் சிராஜூதீன்
விளையும் பயிர்
முளையிலே தெரியும் என்பர்..
பயிர் என்பது விவசாயம் மட்டுமல்ல....
நம் இளைய தலைமுறையும் தான்....
பயிர் செழிக்க உரமிடுவோம் ..
இளைய தலைமுறை செழிக்க...
நல்ல சிந்தனைகளை விதைப்போம் ....
நாட்டுக்காக வாழ்ந்த தன்னலமற்ற தலைவர்களை
எடுத்துக்காட்டாக எடுத்துக் கூறிடுவோம்.....
விளையும் பயிர்களை முளையிலே சீராக்குவோம்...
விளையும் பயிர் முளையிலே
விதைக்காய் பிஞ்சிலே
என்பது பழமொழி.. ..

விளையும் பயிர்கள் உயிர் காக்கும்...
இளைய தலைமுறை நாட்டைக் காக்கும்...
காண்பதையும்
கேட்பதையும் போலச்செய்வர்
இளம்பருவத்தினர்....
மூத்தோர் இளையோர் முன் கண்ணாடி..
மூத்தோர் சிறந்த வழிகாட்டிகள்...
எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்ய முடியும்...
நல்லதை விதைப்போம்
வளம்பேறுவோம்..
விளையும் பயிர்
வீரத்தையும்
ஒற்றுமையையும்
பொறுமையையும்
பொறுப்பையும்
அன்பையும்
ஊட்டச்சத்தாக உண்டு செழித்தோங்க வேண்டும்...
உயிர்கள் இன்புற்று வாழ
அதற்கு உறுதுணையே
நம்தூண்டுகோல்..
மனதில் பதிய வைப்போம்
சிறந்ததை...
வாழவைப்போம்
வளமுடன் நலமுடன்
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
இயற்கை ஒரு மாபெரும் ஆசிரியர்... The greatest lessons I have learnt is
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
சிந்தனைச் சிதறல்.. இருக்கும் வரை தாங்கிப் பிடிப்போம்!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
விளையும் பயிர்!
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
படைப்பாற்றல்!
Srirpiya Short Story: நிழலும் நிலவுமாய்..!
{{comments.comment}}