வானில் ஒரு அதிசயம்.. ஆனால் வரும் ஆகஸ்ட் மாதம் இல்லையாம்.. 2027ல்தான் நடக்கப் போகுதாம்!

Jul 23, 2025,06:46 PM IST

சென்னை: சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. 2025 ஆகஸ்ட் 2 ஆம் தேதி வானில் ஒரு அதிசயம் நிகழும் என்று சொல்கிறார்கள். இது வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றும் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த அதிசயம் 2027 ஆம் ஆண்டு தான் நிகழப்போகிறது. 


மக்கள் 2025 ஆம் ஆண்டுக்காக ஆர்வமாக இருந்த நிலையில், இது 2027 ஆம் ஆண்டுக்கான நிகழ்வு என்பதை தெரிந்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும், இது உண்மையிலேயே சுவாரஸ்யமான விஷயம்தான். காரணம், பூமியிலோ அல்லது வானிலோ எந்த விஷயம் நடந்தாலும் அது தற்போது வாழும் மனிதர்களுக்கு அதிசயமான விஷயம்தான்.. அதை அனுபவிக்க நாம் நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதால் இதுபோன்ற அதிய நிகழ்வுகளை நாம் மிஸ் செய்யாமல் பார்த்தும், உணர்ந்தும் அனுபவிக்கத் தவறக் கூடாது.


NASA வெளியிட்டுள்ள தகவல்படி, வருகிற ஆகஸ்ட் 2ம் தேதியன்று சூரிய கிரகணம் நிகழ வாய்ப்பில்லை. இதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். 


சரி ஏன் இந்த சூரிய கிரகணம் குறித்து மக்கள் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்? 




இதற்கு காரணம் இருக்கிறது. 2027 ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஒரு முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இது 1991 முதல் 2114 வரையிலான காலகட்டத்தில் நடந்த சூரிய கிரகணங்களிலேயே மிக நீண்ட சூரிய கிரகணமாக இருக்கப் போகிறது. இதனால்தான் உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆய்வாளர்கள் இதற்காக தயாராகி வருகின்றனர். மக்களுக்கும் ஆர்வம் பெருகியுள்ளது.


அதேசமயம், இந்த சூரிய கிரகணம் பற்றி குழப்பம் வேண்டாம். 2027 ஆம் ஆண்டு வரப் போகும் இந்த சூரிய கிரகணம், ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் தெரியும். இது ஒரு அற்புதமான காட்சியாக இருக்கும். மற்ற சூரிய கிரகணங்களை போல இது இருக்காது. இந்த கிரகணம் 6 நிமிடம் 23 வினாடிகள் வரை நீடிக்கும். இதுவே மிக நீண்ட சூரிய கிரகணமாக இருக்கும். எனவே இது நிச்சயம் ஒரு மேஜிக்கல் மொமன்ட்தான்.


எனவே,  பொறுமையாக இருப்போம்.. 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நிகழும் இந்த வானியல் நிகழ்வை காண தயாராவோம். அதேசமயம், இந்தியாவில் இது தெரியாது என்பதால் நாம் இதை மிஸ் செய்யப் போகிறோம் என்பது சற்று ஏமாற்றம்தான்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?

news

வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!

news

தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி

news

அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்

news

ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?

news

10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்

news

அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்