மும்பை: எல் ஐ சி இணையதளம் முழுவதுமாக இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தை தேர்வு செய்யும் ஆப்ஷனைக் கூட இந்தியில்தான் வைத்துள்ளனர்.
எல் ஐ சி இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இது ஆயுள் காப்பீடு அல்லாத வணிகப் பரிவர்த்தனைகளையும் செய்கிறது. இதன் சேவைகள் இந்தியா முழுவதும் பரவி உள்ளன. இதில் தனிநபர் காப்பீட்டுக் கொள்கைகளில் மருத்துவக் காப்பீடு, விபத்து, சொத்து மற்றும் வாகனக் காப்பீடு என பல்வேறு கவரேஜ் பாலிசிகள் அடங்கி உள்ளன. எல்ஐசி பாலிசி இல்லாத வீடே இல்லை என்று கூறலாம்.
அதேபோல் தொழில்துறை இன்சூரன்ஸ் பாலிசிகள் திட்டம், கட்டுமானம், ஒப்பந்தங்கள், தீ, உபகரணங்கள் இழப்பு, போன்றவற்றுக்கான கவரேஜை வழங்குகிறது. இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் எதிர்கால கனவுகளை கருத்தில் கொண்டு எல்ஐசி நிறுவனத்தில் கணக்கு வைத்து பயன் அடைந்து வருகின்றனர். இதற்காக பல்வேறு காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் எல்ஐசியின் இணையதளம் முழுக்க முழுக்க இந்திக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தி மொழியை மாற்றம் செய்ய भाषा என்ற பட்டனை அழுத்தி தேர்வு செய்தால் மட்டுமே LIC பக்கம் ஆங்கில மொழிக்கு மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொழியை மாற்றம் செய்வதற்கு முதலில் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பதால் இந்தி தெரியாதவர்களுக்கு பெரும் திண்டாட்டமாகியுள்ளது.
இந்தி தவிர ஆங்கிலம் மற்றும் மராத்தியில் இந்த இணையதளத்தை வடிவமைத்துள்ளனர். இந்த இந்தி மாற்றத்துக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் தனது இணையத்தள முகப்பை இந்தியில் மாற்றி உள்ளது. ஆங்கிலத் தெரிவு இருக்கிறது என்பதையே இந்தியில் "பாஷை" என்று எழுதியிருக்கிறார்கள். எல். ஐ. சி யின் வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இருப்பினும் நாம் ஒரு மொழியை மாற்றிப் பயன்படுத்த ஆரம்பித்தால், அதே மொழியில்தான் தளம் வருகிறது என்பது சற்று ஆறுதலாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}