மும்பை: எல் ஐ சி இணையதளம் முழுவதுமாக இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தை தேர்வு செய்யும் ஆப்ஷனைக் கூட இந்தியில்தான் வைத்துள்ளனர்.
எல் ஐ சி இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இது ஆயுள் காப்பீடு அல்லாத வணிகப் பரிவர்த்தனைகளையும் செய்கிறது. இதன் சேவைகள் இந்தியா முழுவதும் பரவி உள்ளன. இதில் தனிநபர் காப்பீட்டுக் கொள்கைகளில் மருத்துவக் காப்பீடு, விபத்து, சொத்து மற்றும் வாகனக் காப்பீடு என பல்வேறு கவரேஜ் பாலிசிகள் அடங்கி உள்ளன. எல்ஐசி பாலிசி இல்லாத வீடே இல்லை என்று கூறலாம்.

அதேபோல் தொழில்துறை இன்சூரன்ஸ் பாலிசிகள் திட்டம், கட்டுமானம், ஒப்பந்தங்கள், தீ, உபகரணங்கள் இழப்பு, போன்றவற்றுக்கான கவரேஜை வழங்குகிறது. இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் எதிர்கால கனவுகளை கருத்தில் கொண்டு எல்ஐசி நிறுவனத்தில் கணக்கு வைத்து பயன் அடைந்து வருகின்றனர். இதற்காக பல்வேறு காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் எல்ஐசியின் இணையதளம் முழுக்க முழுக்க இந்திக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தி மொழியை மாற்றம் செய்ய भाषा என்ற பட்டனை அழுத்தி தேர்வு செய்தால் மட்டுமே LIC பக்கம் ஆங்கில மொழிக்கு மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொழியை மாற்றம் செய்வதற்கு முதலில் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பதால் இந்தி தெரியாதவர்களுக்கு பெரும் திண்டாட்டமாகியுள்ளது.
இந்தி தவிர ஆங்கிலம் மற்றும் மராத்தியில் இந்த இணையதளத்தை வடிவமைத்துள்ளனர். இந்த இந்தி மாற்றத்துக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் தனது இணையத்தள முகப்பை இந்தியில் மாற்றி உள்ளது. ஆங்கிலத் தெரிவு இருக்கிறது என்பதையே இந்தியில் "பாஷை" என்று எழுதியிருக்கிறார்கள். எல். ஐ. சி யின் வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் முயற்சியை கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இருப்பினும் நாம் ஒரு மொழியை மாற்றிப் பயன்படுத்த ஆரம்பித்தால், அதே மொழியில்தான் தளம் வருகிறது என்பது சற்று ஆறுதலாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்பரங்குன்றம் விவகாரம்.. மதுரை ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து.. உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்
திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}