சென்னை: மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஆரம்பத்திலிருந்தே டிரெண்டிங்குகள் மிகத் தெளிவாக உள்ளன. எந்தக் குழப்பமும் இல்லாமல் மக்கள் வாக்களித்திருப்பதையே இது காட்டுகிறது. தொடக்கம் முதல் பெரிய அதிர்ச்சியோ, சர்ப்பிரைஸோ இல்லாமல் அழகாக போய்க் கொண்டிருக்கிறது தமிழ்நாடு டிரெண்ட்ஸ்.
தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அதிமுக, பாஜக கூட்டணிகளுக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் முன்னிலையில் உள்ளார்.

பாஜக கூட்டணியில் பாஜக எந்த இடத்திலும் லீடிங்கில் இல்லை. மாறாக, பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தருமபுரியில் முன்னிலையில் இருந்து வந்தார். தற்போது அவரும் பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக தனித்து எந்த இடத்திலும் முன்னிலை பெறவில்லை என்பது அந்தக் கட்சியினரை அதிர வைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் முன்னிலையில் இருந்தார். தற்போது அவரும் பின்னுக்குப் போய் விட்டார்.
தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் திமுக கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைத்தது. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்கு எண்ணிக்கையிலும் அதே போக்கு நீடிக்கிறது. கடந்த முறை தமிழ்நாட்டில் மொத்தம் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றது. கடந்த முறை தேனியில் மட்டும் தோற்றது. தற்போது அன்று விட்டதையும் சேர்த்து இந்த முறை திமுக கூட்டணி பெறவுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}