சென்னை: தமிழ்நாட்டின் தலைத் தொகுதி திருவள்ளூர். தனித் தொகுதியான திருவள்ளூர் தமிழ்நாட்டின் வட எல்லையில் உள்ளது.
2008ம் ஆண்டு நடந்த தொகுதி மறு சீரமைப்பின்போது பிறந்த தொகுதிதான் திருவள்ளூர் தனி தொகுதி. தமிழ்நாட்டின் முதல் மக்களவைத் தொகுதி திருவள்ளூர்தான். கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, மாதவரம் ஆகிய ஆறு சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவைத் தொகுதி திருவள்ளூர் தனி.
ஆறு சட்டசபைத் தொகுதிகளில் பொன்னேரி தனி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்ளார். மற்ற 5 தொகுதிகளிலும் திமுக உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.
திமுக - அதிமுக உதவியுடன் காங்கிரஸ் கோட்டை
தமிழ்நாட்டின் வட முனையில் உள்ள திருவள்ளூர் தொகுதியானது 2008ம் ஆண்டு உருவாக்கப்பட்டது என்றாலும் கூட அதற்கு முன்பு 3 மக்களவைத் தேர்தல்களை இந்தத் தொகுதி திருவள்ளூர் என்ற பெயரிலேயே தேர்தல்களை சந்தித்துள்ளது. முதல் தேர்தலான 1951ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர் மரகதம் சந்திரசேகர் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 1957 மற்றும் 1962ல் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் கோவிந்தராஜு நாயுடு வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
1962ம் ஆண்டுக்குப் பிறகு இந்தத் தொகுதி மறைந்து, ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதி உருவாக்கப்பட்டது. பின்னர் 2008ம் ஆண்டு தொகுதி மறு வரையின்போது மீண்டும் திருவள்ளூர் தனி தொகுதி உருவாக்கப்பட்டது. 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதி தனது முதல் தேர்தலை இதை சந்தித்தது. அதில் அதிமுகவைச் சேர்ந்த பி.வேணுகோபால் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த 2014 தேர்தலிலும் அவரே வெற்றி பெற்றார். 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் இங்கு காங்கிரஸ் கட்சியின் டாக்டர் ஜெயக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் 1962ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது.
கூட்டணிக் கட்சிகளே போட்டி
திமுக அல்லது அதிமுக கூட்டணியில் மாறி மாறி காங்கிரஸ் இடம் பெற்று வரும் நிலையில் இந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரஸுக்கே விட்டுக் கொடுப்பது திமுக, அதிமுகவின் வாடிக்கையாக இருந்து வந்தது. இதனால்தான் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது. மற்றபடி, இந்தத் தொகுதியில் திமுக, அதிமுக இரண்டுமே கிட்டத்தட்ட சமபலத்துடன் உள்ள தொகுதியாகும்.
அதிக அளவில் பட்டியல் இன மக்கள் இந்தத் தொகுதியில் வசிக்கின்றனர். வன்னியர்கள், முதலியார்கள், நாயுடு சமூகத்தவர்கள் அடுத்து அதிக அளவில் உள்ள சமூகத்தினர் ஆவர். இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட திருவள்ளூர் தனி தொகுதி அதிக அளவிலான தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு தொழில் நகரமாகும். தொழில் நகரகளுக்கு இணையாக இங்கு விவசாயமும் சிறப்பாக உள்ளது. சென்னையின் தலைப் பகுதியாக உள்ள திருவள்ளூரிலிருந்துதான் அதிக அளவிலான குடிநீர் சென்னைக்கு வருகிறது.
மீண்டும் வெல்லுமா காங்கிரஸ்?
காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது இத்தொகுதியின் உறுப்பினராக டாக்டர் ஜெயக்குமார் உள்ளார். கடந்த 2019 தேர்தலில் இங்கு பதிவான வாக்குகள் விவரம்:
மொத்த வாக்குகள் - 19,46,870
பதிவான வாக்குகள் - 14,03,349
டாக்டர் ஜெயக்குமார் (காங்கிரஸ்) - 7,67,292
டாக்டர் பி. வேணுகோபால் (அதிமுக) - 4,10,337
எம்.லோகரங்கன் (ம.நீ.ம) - 73,731
வெற்றிச்செல்வி ( நாம் தமிழர்) - 65,416
வரும் தேர்தலில் வாக்காளர்கள் விவரம்:
மொத்த வாக்காளர்கள்: 20,58,098
ஆண்கள்: 10,10,968
பெண்கள்: 10,46,755
மூன்றாம் பாலினத்தவர்: 375
தொழில்நகரமாக இருந்தபோதும் கூட, சென்னைக்கு மிக மிக அருகே இருந்தும் கூட அதிக அளவில் குறைகளுடன் கூடிய தொகுதியாகவே திருவள்ளூர் இன்னும் இருக்கிறது. வருகிற தேர்தலிலும் இத்தொகுதியில் காங்கிரஸே போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மக்கள் இந்த முறையும் காங்கிரஸுக்கே ஓட்டுப் போடுவார்களா அல்லது திருப்பத்தை ஏற்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}