லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க சமாஜ்வாடி கட்சி முடிவு செய்துள்ளதாம். இந்த முடிவையும் காங்கிரஸ் கட்சிக்கு அது தெரிவித்து விட்டதாம். இதை ஏற்றுக் கொண்டால், ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரையில் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்வாராம்.
எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. அங்கிருந்து ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட சில கட்சிகள் வெளியேறி விட்டன. இருக்கிற கட்சிகளுக்குள்ளும் கூட ஒற்றுமை இல்லை. தொகுதிப் பங்கீட்டிலும் சிக்கல் நிலவுகிறது.
உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை அங்கு பெரிய கட்சியாக உள்ள சமாஜ்வாடிக் கட்சி கூட்டணியை விரும்பவில்லை. அதிக தொகுதிகளில் தானே போட்டியிட விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளைக் கேட்கிறது.
இந்த நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஒரு முடிவுக்கு சமாஜ்வாடிக் கட்சி வந்துள்ளதாம். அதாவது காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் மட்டும் போட்டியிடலாம். பிற தொகுதிகளில் அவர்கள் வேட்பாளர்களை நிறுத்தக் கூடாது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொண்டால், ராகுல் காந்தி உ.பியில் நடத்தவுள்ள பாரத ஒற்றுமை நீதி யாத்திரையில் அகிலேஷ் யாதவு் பங்கேற்பாராம். இந்த முடிவு காங்கிரஸுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.பியில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. கடந்த லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. அதில் இந்தி பெல்ட் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மிக மிகக் குறைந்த அளவிலான வெற்றியே காங்கிரஸுக்குக் கிடைத்தது. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் மட்டும் சோனியா காந்தி வெற்றி பெற்றார். அமேதியில் ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.
ராகுல் காந்தி நடத்தி வரும் பாரத ஒற்றுமை யாத்திரையானது உ.பியில் நுழையவுள்ளது. அங்கு பாபகாஞ்ச் பகுதியில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பேசவுள்ளனர். அதில் அகிலேஷை கலந்து கொள்ள வைக்க காங்கிரஸ் ஆர்வமாக உள்ளது.
ஏற்கனவே மமதா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் முரண்டு பிடிக்கிறார். டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்டையைக் கொடுக்கிறது. நிதீஷ் குமார் வெளியேறி விட்டார். ஜம்மு காஷ்மீரிலும் சிக்கல் நீடிக்கிறது. இப்படி இருக்கையில் இப்போது சமாஜ்வாடியும் நெருக்கடி தருவதால் காங்கிரஸ் விழி பிதுங்கி நிற்கிறது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}