லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க சமாஜ்வாடி கட்சி முடிவு செய்துள்ளதாம். இந்த முடிவையும் காங்கிரஸ் கட்சிக்கு அது தெரிவித்து விட்டதாம். இதை ஏற்றுக் கொண்டால், ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரையில் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்வாராம்.
எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. அங்கிருந்து ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட சில கட்சிகள் வெளியேறி விட்டன. இருக்கிற கட்சிகளுக்குள்ளும் கூட ஒற்றுமை இல்லை. தொகுதிப் பங்கீட்டிலும் சிக்கல் நிலவுகிறது.
உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை அங்கு பெரிய கட்சியாக உள்ள சமாஜ்வாடிக் கட்சி கூட்டணியை விரும்பவில்லை. அதிக தொகுதிகளில் தானே போட்டியிட விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளைக் கேட்கிறது.
இந்த நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஒரு முடிவுக்கு சமாஜ்வாடிக் கட்சி வந்துள்ளதாம். அதாவது காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளில் மட்டும் போட்டியிடலாம். பிற தொகுதிகளில் அவர்கள் வேட்பாளர்களை நிறுத்தக் கூடாது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொண்டால், ராகுல் காந்தி உ.பியில் நடத்தவுள்ள பாரத ஒற்றுமை நீதி யாத்திரையில் அகிலேஷ் யாதவு் பங்கேற்பாராம். இந்த முடிவு காங்கிரஸுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உ.பியில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. கடந்த லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. அதில் இந்தி பெல்ட் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மிக மிகக் குறைந்த அளவிலான வெற்றியே காங்கிரஸுக்குக் கிடைத்தது. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரேபரேலி தொகுதியில் மட்டும் சோனியா காந்தி வெற்றி பெற்றார். அமேதியில் ராகுல் காந்தி தோல்வியடைந்தார்.
ராகுல் காந்தி நடத்தி வரும் பாரத ஒற்றுமை யாத்திரையானது உ.பியில் நுழையவுள்ளது. அங்கு பாபகாஞ்ச் பகுதியில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பேசவுள்ளனர். அதில் அகிலேஷை கலந்து கொள்ள வைக்க காங்கிரஸ் ஆர்வமாக உள்ளது.
ஏற்கனவே மமதா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் முரண்டு பிடிக்கிறார். டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்டையைக் கொடுக்கிறது. நிதீஷ் குமார் வெளியேறி விட்டார். ஜம்மு காஷ்மீரிலும் சிக்கல் நீடிக்கிறது. இப்படி இருக்கையில் இப்போது சமாஜ்வாடியும் நெருக்கடி தருவதால் காங்கிரஸ் விழி பிதுங்கி நிற்கிறது.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}