54 வேட்பாளர்கள் போட்டியிடும்.. கரூரில்.. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள்!

Mar 31, 2024,06:17 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதியாகி விட்ட நிலையில் அடுத்தடுத்த ஏற்பாடுகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.


ஒரு பக்கம் அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். மக்களைக் கவரும் அதிரடியான வேலைகளில் அனைவரும் தீவிரம் காட்டியுள்ளனர். ஒவ்வொரு கட்சியும், வேட்பாளர்களும் செய்யும் ஜில் ஜில் ஜிகா ஜிகா பிரச்சாரங்களை மக்கள் ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.


மறுபக்கம் தேர்தல் அலுவலர்கள் தங்களது வேலைகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இதையடுத்து தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. இதில் அதிகபட்சமாக கரூரில் 54 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர்.




ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்களின் பெயர்களை உள்ளிட முடியும். எனவே தமிழ்நாட்டில் 15 வேட்பாளர்கள் வரை போட்டியிடும் 10 தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும்.


15 வேட்பாளர்களுக்கு மேல் அதேசமயம், 30 வேட்பாளர்களுக்குள் போட்டியிடும் 24 தொகுதிகளில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 2 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.


30க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ள 4 தொகுதிகளில், வாக்குச் சாவடிகளில் தலா 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. 


கரூல் தொகுதியில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் இங்கு மட்டும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.


விரைவில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தப்பட வேண்டிய சின்னத்துடன் கூடிய வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு அதன் பின்னர் அவை வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி தொடங்கவுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலும் இதே நாளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக.,விற்கு எத்தனை சீட்? .. சூப்பர் சுவாரஸ்ய எதிர்பார்ப்பு!

news

விஜய் சுற்றுப்பயணத்தில் மாற்றம்... 27ம் தேதி சேலம் இல்லைங்க.. கரூரில் மக்களை சந்திக்கிறார்

news

சென்னையில் ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை மைய அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

news

திமுக அரசின் சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்!

news

விஜயம் - ஜெயம் பேச்சு.. நான் சொன்னது ஆக்சுவல்லி மொக்கையானது.. பார்த்திபன் விளக்கம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பு... ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு

news

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன்?: அன்புமணி ராமதாஸ்!

news

ஜிஎஸ்டி சீரமைப்பு அமலான முதல் நாளில்.. இந்தியப் பங்குச் சந்தையில் வீழ்ச்சி

அதிகம் பார்க்கும் செய்திகள்