54 வேட்பாளர்கள் போட்டியிடும்.. கரூரில்.. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள்!

Mar 31, 2024,06:17 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதியாகி விட்ட நிலையில் அடுத்தடுத்த ஏற்பாடுகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.


ஒரு பக்கம் அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். மக்களைக் கவரும் அதிரடியான வேலைகளில் அனைவரும் தீவிரம் காட்டியுள்ளனர். ஒவ்வொரு கட்சியும், வேட்பாளர்களும் செய்யும் ஜில் ஜில் ஜிகா ஜிகா பிரச்சாரங்களை மக்கள் ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.


மறுபக்கம் தேர்தல் அலுவலர்கள் தங்களது வேலைகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இதையடுத்து தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. இதில் அதிகபட்சமாக கரூரில் 54 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர்.




ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்களின் பெயர்களை உள்ளிட முடியும். எனவே தமிழ்நாட்டில் 15 வேட்பாளர்கள் வரை போட்டியிடும் 10 தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும்.


15 வேட்பாளர்களுக்கு மேல் அதேசமயம், 30 வேட்பாளர்களுக்குள் போட்டியிடும் 24 தொகுதிகளில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 2 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.


30க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ள 4 தொகுதிகளில், வாக்குச் சாவடிகளில் தலா 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. 


கரூல் தொகுதியில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் இங்கு மட்டும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.


விரைவில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தப்பட வேண்டிய சின்னத்துடன் கூடிய வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு அதன் பின்னர் அவை வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி தொடங்கவுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலும் இதே நாளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

news

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!

news

2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!

news

குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்

news

2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!

news

Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

news

அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

news

அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்