சென்னை: தமிழ்நாட்டில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதியாகி விட்ட நிலையில் அடுத்தடுத்த ஏற்பாடுகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.
ஒரு பக்கம் அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். மக்களைக் கவரும் அதிரடியான வேலைகளில் அனைவரும் தீவிரம் காட்டியுள்ளனர். ஒவ்வொரு கட்சியும், வேட்பாளர்களும் செய்யும் ஜில் ஜில் ஜிகா ஜிகா பிரச்சாரங்களை மக்கள் ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.
மறுபக்கம் தேர்தல் அலுவலர்கள் தங்களது வேலைகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இதையடுத்து தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. இதில் அதிகபட்சமாக கரூரில் 54 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர்.

ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்களின் பெயர்களை உள்ளிட முடியும். எனவே தமிழ்நாட்டில் 15 வேட்பாளர்கள் வரை போட்டியிடும் 10 தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும்.
15 வேட்பாளர்களுக்கு மேல் அதேசமயம், 30 வேட்பாளர்களுக்குள் போட்டியிடும் 24 தொகுதிகளில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 2 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
30க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ள 4 தொகுதிகளில், வாக்குச் சாவடிகளில் தலா 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.
கரூல் தொகுதியில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் இங்கு மட்டும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
விரைவில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தப்பட வேண்டிய சின்னத்துடன் கூடிய வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு அதன் பின்னர் அவை வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி தொடங்கவுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலும் இதே நாளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}