54 வேட்பாளர்கள் போட்டியிடும்.. கரூரில்.. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள்!

Mar 31, 2024,06:17 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதியாகி விட்ட நிலையில் அடுத்தடுத்த ஏற்பாடுகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.


ஒரு பக்கம் அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். மக்களைக் கவரும் அதிரடியான வேலைகளில் அனைவரும் தீவிரம் காட்டியுள்ளனர். ஒவ்வொரு கட்சியும், வேட்பாளர்களும் செய்யும் ஜில் ஜில் ஜிகா ஜிகா பிரச்சாரங்களை மக்கள் ஜாலியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.


மறுபக்கம் தேர்தல் அலுவலர்கள் தங்களது வேலைகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இதையடுத்து தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. இதில் அதிகபட்சமாக கரூரில் 54 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர்.




ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளர்களின் பெயர்களை உள்ளிட முடியும். எனவே தமிழ்நாட்டில் 15 வேட்பாளர்கள் வரை போட்டியிடும் 10 தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும்.


15 வேட்பாளர்களுக்கு மேல் அதேசமயம், 30 வேட்பாளர்களுக்குள் போட்டியிடும் 24 தொகுதிகளில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 2 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.


30க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ள 4 தொகுதிகளில், வாக்குச் சாவடிகளில் தலா 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. 


கரூல் தொகுதியில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் இங்கு மட்டும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.


விரைவில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தப்பட வேண்டிய சின்னத்துடன் கூடிய வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு அதன் பின்னர் அவை வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி தொடங்கவுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலும் இதே நாளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

குடியரசுத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.. நாளை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்!

news

Operation Sindoor.. பாகிஸ்தானை எப்படி தாக்கினோம்.. விளக்கிய பெண் அதிகாரிகள்.. யார் இவர்கள்?

news

4 years of DMK Govt: திராவிட மாடல் ஆட்சியே விடியல் தரும் ஆட்சி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

இந்திய தாக்குதலில்.. எங்க குடும்பத்துல 10 பேரு செத்துப் போயிட்டாங்க.. மசூத் அஸார் அலறல்!

news

மங்கள மீனாட்சிக்கு மதுரையில் திருக்கல்யாணம்.. பெண் குழந்தைகளுக்கு வைக்க 31 தமிழ்ப் பெயர்கள்!

news

ராணுவத்திற்கு ராயல் சல்யூட் அடித்த விஜய்.. இதுதான் இந்தியாவின் முகம்.. பாராட்டிய சிவகார்த்திகேயன்!

news

இந்தியாவின் 25 நிமிடத் தாக்குதல்.. கொல்லப்பட்ட 70 பயங்கரவாதிகள்.. திரில் நடவடிக்கை!

news

IPL வரலாற்றில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை.. 3வது முறையாக.. 500+ ரன்களைக் கடந்து புதிய வரலாறு!

news

சென்னை சூப்பர் கிங்ஸுடன் இன்று மோதல்.. பெரும் வெற்றியைப் பெறும் மும்முரத்தில் KKR!

அதிகம் பார்க்கும் செய்திகள்