முழு முதற் கடவுள் விநாயகரை இன்று வழிபாடு செய்தால்.. இதெல்லாம் நடக்கும் மக்களே!

Mar 03, 2025,01:26 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


வளர்பிறை சதுர்த்தி 3. 03. 2025 முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாடு செய்ய நினைத்தது எல்லாம் நடக்கும்.


இன்று பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு வாழ்த்துக்கள் கூறி, விநாயகரை வழிபாடு செய்து ,நமது பிரார்த்தனை அவர்கள் யாவருக்கும் சென்று அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.


விநாயகப் பெருமானை நினைத்து எந்த செயல் செய்தாலும் வெற்றி நிச்சயம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவரை வழிபட தடைபட்ட செயல்கள் தடையின்றி நடைபெறும் வெற்றி கிட்டும்.


மார்ச் மாதம் 3ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று இரவு சதுர்த்தி திதி 10 :36 வரை உள்ளது. வளர்பிறை சதுர்த்தி திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வருவது மிகச் சிறந்த நாள் ஆகும். இன்றைய தினம் அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய நம் கஷ்டங்கள் யாவும் தீரும்.


கோவிலுக்கு செல்பவர்கள் இரண்டு நெய் தீபம்  அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட அவரவர்க்கு உள்ள கஷ்டங்கள் விலகி நல்ல காலம் பிறக்க ஆரம்பிக்கும்.




கோவிலுக்கு அபிஷேகப் பொருட்கள், மலர்கள், அருகம்புல் மாலை வாங்கி விநாயகருக்கு சமர்ப்பிக்கலாம். வீட்டில் பூஜை அறையில் விநாயகர் சிலை அல்லது படத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்யவும் .இரண்டு விளக்கு ஏற்றி அச்சு வெல்லம் , பால் சர்க்கரை பொங்கல் ,பழங்கள் நைவேத்தியமாக வைத்து தீப தூப ஆராதனை செய்வது நன்மை பயக்கும்.


'ஓம் விக்ன விநாயகா போற்றி ஓம் 'என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யலாம். விநாயகர் அகவல் படிக்கலாம் தோப்புக்கரணம் போட்டு வழிபட விநாயகர் அருள் பரிபூரணமாக கிட்டும். வீட்டில் தீபம் ஏற்றி குறைந்தது அரை மணி நேரம் எரிய வைத்து ஒரு மலர் வைத்து குளிர வைக்கவும்.


பிரசாதமாக வைத்த பொருட்களை வீட்டில் உள்ளவர்களுக்கும் அருகில் உள்ள அண்டை வீட்டாருக்கும் பகிர்ந்து கொடுக்கவும். இவ்வாறு வளர்பிறை சதுர்த்தி திதி அன்று விநாயகர் வழிபாடு செய்ய அனைவரது தொழில் முன்னேற்றம் கல்வி வாழ்க்கை தரம் உயரும்.


மேலும் ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்