சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்றுள்ளது. இதனால் கடலோல வட மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை புறநகர்ப் பகுதிகளில் காலையிலேயே மழை வெளுத்து வாங்கி விட்டது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து தற்போது வங்க கடலில் மிச்சாங் என்ற புயல் உருவாக உள்ளது. இதன் காரணமாக சென்னையில் நள்ளிரவு முதலே விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை ,அசோக் நகர் ,தேனாம்பேட்டை, சேப்பாக்கம், உள்ளிட்ட நகரின் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவாக கூடும். இந்த புயலுக்கு மிச்சாங் என பெயரிடப்பட்டுள்ளது.
.jpg)
புயல் சின்னம் காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மூன்று நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று மழை நிலவரம்:
தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் எதிரொலியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கன மழையை எதிர்பார்க்கலாம்.
ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி
தாடி பாலாஜி.. Nooo.. இனி பொதுச் செயலாளர் பாலாஜி.. புதுச்சேரியில் அடித்த லக்கி பிரைஸ்!
தமிழகத்தில் நாளை மிதமான மழை செய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!
தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!
பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!
ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்
77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி
{{comments.comment}}