48 மணி நேரத்தில் புயல்.. வலுப் பெற்றது தாழ்வுப் பகுதி.. சென்னையில் இடைவிடாத கனமழை!

Nov 29, 2023,05:49 PM IST

சென்னை:  வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்றுள்ளது. இதனால் கடலோல வட மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை புறநகர்ப் பகுதிகளில் காலையிலேயே மழை வெளுத்து வாங்கி விட்டது.


வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து தற்போது வங்க கடலில் மிச்சாங் என்ற புயல் உருவாக உள்ளது. இதன் காரணமாக சென்னையில் நள்ளிரவு முதலே விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை ,அசோக் நகர் ,தேனாம்பேட்டை, சேப்பாக்கம், உள்ளிட்ட நகரின் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.


இந்த நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவாக கூடும். இந்த புயலுக்கு மிச்சாங் என பெயரிடப்பட்டுள்ளது.




புயல் சின்னம் காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மூன்று நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


இன்று மழை நிலவரம்:


தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.


இதன் எதிரொலியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கன மழையை எதிர்பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்