லக்னோ வீரர் திக்வேஷ் ரதியின் நோட்புக் கொண்டாட்டம்.. கட்டம் கட்டிய ஐபிஎல்.. ஒரு போட்டிக்கு தடை!

May 20, 2025,06:49 PM IST

ஹைதராபாத்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் ஷர்மா விக்கெட்டை வீழ்த்தி நோட்புக் கொண்டாட்டம் செய்த லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி அடுத்த போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று லக்னோவில்  நடைபெற்றது. 61வது லீக் போட்டியான இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும்  மார்க்ரம்  களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி   115 ரன்களை குவித்தனர். 




பின்னர்,  மார்ஷ் 65 ரன்னில் ஆட்டம் இழந்தார்.  அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 7 ரன்களில் வெளியேறினார். மார்க்ரம் 61 ரன்களும், பூரன் 45 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 205 ரன்கள் எடுத்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேஸ் செய்த சன்ரைஸ் அணி ஹைதராபாத் அணியின் சார்பாக ஓப்பனிங்கில் களமிறங்கிய

அபிஷேக் சர்மா  20 பந்துகளில் 59 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.  தொடர்ந்து, இஷான் கிஷன் 35 ரன்களும், கிளாசன் 47 ரன்களும், கமிந்து மெண்டிஸ் 32 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். 


இறுதியாக ஹைதராபாத் அணி, 18.2 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 206  ரன்களை எடுத்து அபார வெற்றியைப் பெற்றது. இதன்மூலம் லக்னா அணி புள்ளி பட்டியலில் 12 போட்டிகளுக்கு 10 புள்ளிகளைப் பெற்று ப்ளே ஆப் சுற்றை தவறைவிட்டது. லக்னோ அணி தொடரில் இருந்தும் வெளியேறியது. 


இதற்கிடையே லக்னோ பந்து வீச்சாளர் திக்னேஷ் ரதி சன்ரைஸ் அணி வீரர் அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்தி விட்டு, நோட்புக் கொண்டாட்டம் செய்துள்ளார். அதாவது  அவரை அவுட் செய்தவுடன் கையில் எழுதுவது போல் சிக்னல் கொடுத்துள்ளார். அவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார். 


இதையடுத்து திக்னேஷ் ரதி அடுத்த போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். மேலும் போட்டிக்கான ஊதியத்தில் 50 சதவீதம் அபராதமும் விதித்தது. 50 சதவீத அபராதத்தில் 25 சதவீதம் அபிஷேக் ஷர்மாவுக்கு வழங்க வேண்டும் எனவும் ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Power Tariff: வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை.. கட்டண சலுகையும் தொடரும்.. அமைச்சர் சிவசங்கர்

news

டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்திற்கு..23ஆம் தேதி செல்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!

news

ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை கிடையாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பு மனவலி தருகிறது.. சீமான்

news

இந்தியாவில் மீண்டும் கொரோனா... தமிழ்நாட்டில் 34 பேருக்கு தொற்று உறுதி: மத்திய அரசு அறிவிப்பு!

news

என் கணவரை விட்டுப் பிரிய மூன்றாவது நபரே காரணம்.. ஆர்த்தி ரவி பரபரப்பு குற்றச்சாட்டு!

news

தங்க நகைக்கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ஆர்பிஐ புதாக 9 விதிமுறைகள் அறிவிப்பு!

news

அரபிக்கடலில் உருவாகிறது சக்தி புயல்.. டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கணிப்பு..!

news

நீட் தேர்வால் 24வது மாணவர் உயிரிழப்பு... டம்மி அப்பா கூறியது அத்தனையும் பொய் : எடப்பாடி பழனிச்சாமி!

news

கடந்த காலங்களில் நடந்தது சாத்தான்களின் ஆட்சி... சாத்தான்குளம் சம்பவமே சாட்சி... அமைச்சர் சேகர்பாபு!

அதிகம் பார்க்கும் செய்திகள்