- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: லஞ்ச்சுக்கு சூப்பரான சைட் டிஷ் துவரம் பருப்பு தேங்காய் துவையல் நேத்து பாத்தோமா.. இன்னிக்கு இன்னொரு துவையல்.. அதுதான் கொள்ளு துவையல்.
கொள்ளு ரசம் சாப்பிட்டிருப்பீங்க.. அதே மாதிரிதான் இந்த கொள்ளு துவையலும் சூப்பர் டேஸ்ட்டா இருக்கும். பார்க்கலாமா.
கொள்ளு துவையலுக்குத் தேவையான பொருட்கள் :

கொள்ளு - 1 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - 10 இலை
மல்லித்தழை - 10
சிறிய வெங்காயம் - 6
பூண்டு - 6 பல்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
பெரிய நெல்லிக்காய் - பாதி
உப்பு, புளி, காரம் தேவைக்கும், விருப்பத்திற்கு ஏற்ப
செய்முறை :
கொள்ளை கழுவி குக்கரில் தண்ணீர் 2 கப் ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும். 4 விசில் விடவும்.
பிரஷர் அடங்கியதும் கொள்ளு வேக வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
இந்த வடிகட்டிய தண்ணீரை பயன்படுத்தி கொள்ளு ரசம் வைக்கலாம்.
மீதி தண்ணீருடன் உள்ள கொள்ளுடன் குக்கரில் வெங்காயம், சீரகம், வரமிளகாய், பூண்டு, பெருங்காயம், சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கி விட்டு குக்கரை மூடி விட வேண்டும்.
குக்கரில் ஒரு விசில் விட்டு ஆறிய பிறகு மிக்ஸியில் கறிவேப்பிலை, நெல்லிக்காய், மல்லித்தழை ஆகியவற்றுடன் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளித்து, துவையலுடன் சேர்த்தால் சுவையான கொள்ளு துவையல் ரெடி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!
தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}