- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: லஞ்ச்சுக்கு சூப்பரான சைட் டிஷ் துவரம் பருப்பு தேங்காய் துவையல் நேத்து பாத்தோமா.. இன்னிக்கு இன்னொரு துவையல்.. அதுதான் கொள்ளு துவையல்.
கொள்ளு ரசம் சாப்பிட்டிருப்பீங்க.. அதே மாதிரிதான் இந்த கொள்ளு துவையலும் சூப்பர் டேஸ்ட்டா இருக்கும். பார்க்கலாமா.
கொள்ளு துவையலுக்குத் தேவையான பொருட்கள் :

கொள்ளு - 1 கப்
சீரகம் - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - 10 இலை
மல்லித்தழை - 10
சிறிய வெங்காயம் - 6
பூண்டு - 6 பல்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
பெரிய நெல்லிக்காய் - பாதி
உப்பு, புளி, காரம் தேவைக்கும், விருப்பத்திற்கு ஏற்ப
செய்முறை :
கொள்ளை கழுவி குக்கரில் தண்ணீர் 2 கப் ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும். 4 விசில் விடவும்.
பிரஷர் அடங்கியதும் கொள்ளு வேக வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
இந்த வடிகட்டிய தண்ணீரை பயன்படுத்தி கொள்ளு ரசம் வைக்கலாம்.
மீதி தண்ணீருடன் உள்ள கொள்ளுடன் குக்கரில் வெங்காயம், சீரகம், வரமிளகாய், பூண்டு, பெருங்காயம், சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கி விட்டு குக்கரை மூடி விட வேண்டும்.
குக்கரில் ஒரு விசில் விட்டு ஆறிய பிறகு மிக்ஸியில் கறிவேப்பிலை, நெல்லிக்காய், மல்லித்தழை ஆகியவற்றுடன் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளித்து, துவையலுடன் சேர்த்தால் சுவையான கொள்ளு துவையல் ரெடி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒவ்வொரு குடும்பத்திற்கு கருணைத் தொகையாக ரூ10,000 வழங்கப்படும்:எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு
இயற்கையுடன் போராடி வருகிறார் தோழர் நல்லகண்ணு.. சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்
வேலூர் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பதில் தாமதமா?.. போலீஸ் தந்த விளக்கம்
ரயில் சேவை ரத்தால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது: கனிமொழி
இனி எண்ட ஸ்டேட் கேரளா இல்ல .. கேரளம்.. பெயர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தென் தமிழகத்தில் நாளை இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்... எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை!
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா: ஓ.பன்னீர்செல்வம்
யாரையும் காலி பண்ண வரவில்லை.. நல்ல விஷயங்களைச் செய்யவே வந்திருக்கிறேன்.. சிவகார்த்திகேயன்
{{comments.comment}}