சென்னை: அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிரான தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதற்கிடையில், வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் டாஸ்மாக் வழக்கு விசாரணையில் இருந்து விலகியதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பணமோசடி என்பது பொருளாதார நீதிக்கு எதிராக சமன்படுத்தப்படும்போது, அது நடைமுறையில் உள்ள சில சிரமங்களுக்கு எதிரான குற்றமாகும். இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டு என்னவேன்றால், விசாரணையில் அரசியல் நோக்கம் உள்ளது என்பதாகும்.
மக்களின் விருப்பம், சோதனைகள் மற்றும் திடீர் சோதனைகளின் போது, தகவல் கசிவைத் தடுக்க ஊழியர்கள் வளாகத்திற்குள் தடுத்து வைக்கப்படுவது நடைமுறைக்குரிய விஷயம். சோதனை நடவடிக்கையின் போது அமலாக்கத்துறையால் ஊழியர்கள் துன்புறுத்தப்பட்டதாக டாஸ்மாக் முன்வைத்த வாதத்தை நிராகரிக்கிறோம். எனவே விசாரணையைத் தொடர அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் சுதந்திரம் அளிக்கிறது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}