சென்னை: அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிரான தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதற்கிடையில், வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் டாஸ்மாக் வழக்கு விசாரணையில் இருந்து விலகியதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பணமோசடி என்பது பொருளாதார நீதிக்கு எதிராக சமன்படுத்தப்படும்போது, அது நடைமுறையில் உள்ள சில சிரமங்களுக்கு எதிரான குற்றமாகும். இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டு என்னவேன்றால், விசாரணையில் அரசியல் நோக்கம் உள்ளது என்பதாகும்.
மக்களின் விருப்பம், சோதனைகள் மற்றும் திடீர் சோதனைகளின் போது, தகவல் கசிவைத் தடுக்க ஊழியர்கள் வளாகத்திற்குள் தடுத்து வைக்கப்படுவது நடைமுறைக்குரிய விஷயம். சோதனை நடவடிக்கையின் போது அமலாக்கத்துறையால் ஊழியர்கள் துன்புறுத்தப்பட்டதாக டாஸ்மாக் முன்வைத்த வாதத்தை நிராகரிக்கிறோம். எனவே விசாரணையைத் தொடர அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் சுதந்திரம் அளிக்கிறது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வருக வருக.. தை மகளே வருக..!
{{comments.comment}}