சென்னை: அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிரான தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதற்கிடையில், வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் டாஸ்மாக் வழக்கு விசாரணையில் இருந்து விலகியதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பணமோசடி என்பது பொருளாதார நீதிக்கு எதிராக சமன்படுத்தப்படும்போது, அது நடைமுறையில் உள்ள சில சிரமங்களுக்கு எதிரான குற்றமாகும். இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டு என்னவேன்றால், விசாரணையில் அரசியல் நோக்கம் உள்ளது என்பதாகும்.
மக்களின் விருப்பம், சோதனைகள் மற்றும் திடீர் சோதனைகளின் போது, தகவல் கசிவைத் தடுக்க ஊழியர்கள் வளாகத்திற்குள் தடுத்து வைக்கப்படுவது நடைமுறைக்குரிய விஷயம். சோதனை நடவடிக்கையின் போது அமலாக்கத்துறையால் ஊழியர்கள் துன்புறுத்தப்பட்டதாக டாஸ்மாக் முன்வைத்த வாதத்தை நிராகரிக்கிறோம். எனவே விசாரணையைத் தொடர அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் சுதந்திரம் அளிக்கிறது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
தமிழ்நாட்டில் தொடரும் மழை... இன்றும் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு... வானிலை மையம்!
உருவானது வெர்டிஸ் நாடு.. 20 வயது இளைஞரின் அதிரடி.. ஆனால் இது கைலாசா மாதிரி கிடையாது!
கொள்ளிடத்தில்..தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
சாமியார் வேடத்தில் மனைவியைத் தேடி வந்த கணவர்.. அடுத்து நடந்த அதிரடி.. அடக் கொடுமையே!
நான் உழைத்து உருவாக்கிய கட்சியை கொடுத்து விட்டு டம்மியாக இருக்க முடியாது: டாக்டர் ராமதாஸ்!
இலங்கை படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்
வரலட்சுமி விரதம் 2025.. லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து விரதம் இருப்போம்!
புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரன் ரூ.75,000 கடந்தது
{{comments.comment}}