சென்னை பீச்சில் அடாவடி செய்த ஜோடிக்கு ஹைகோர்ட் ஜாமீன்.. சந்திரமோகனுக்கு மட்டும் நிபந்தனை!

Nov 08, 2024,05:54 PM IST

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் லூப் கடற்கரையில், போலீஸாரிடம் நள்ளிரவில் அத்துமீறிய விவகாரத்தில் கைதான சந்திர மோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகியோருக்கு  ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதி மன்றம்.


சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் லூப் சாலையில் நள்ளிரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்திரமோகன் என்பவர் தனது சொகுசு காரை போக்குவரத்திற்கு இடஞ்சலாக நிறுத்தியுள்ளார். காரை எடுக்குமாறு ரோந்து போலீசார் கூறிய போது, சந்திரமோகனும் அவரது தோழியும் ஆபாச வார்த்தைகளிலும் போலீஸாரை திட்டியுள்ளனர். மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கூப்பிடவா என்றும் அந்த ஆண் சவால் விட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.




இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பலரும் கொதிப்படைந்தனர். இதையடுத்து மயிலாப்பூர் போலீஸார் சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி  ஆகியோர் மீது, ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்  கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரமோகன் மற்றும் அவரது தோழி  சில நாட்களுக்கு முன்னர் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இருவரின் ஜாமீன் மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்தது.


இதனையடுத்து அந்த ஜோடி மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சந்திரமோகன் மட்டும் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விடுத்துள்ளது.


வெளியில் வந்த இருவரிடமும் எந்த யூடியூப் சானல் பேட்டி எடுத்து அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தப் போகிறதோ தெரியவில்லை.. பார்ப்போம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!

news

திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்

news

மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்

news

திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!

news

திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி

news

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி

news

ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!

அதிகம் பார்க்கும் செய்திகள்