சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் லூப் கடற்கரையில், போலீஸாரிடம் நள்ளிரவில் அத்துமீறிய விவகாரத்தில் கைதான சந்திர மோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதி மன்றம்.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் லூப் சாலையில் நள்ளிரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்திரமோகன் என்பவர் தனது சொகுசு காரை போக்குவரத்திற்கு இடஞ்சலாக நிறுத்தியுள்ளார். காரை எடுக்குமாறு ரோந்து போலீசார் கூறிய போது, சந்திரமோகனும் அவரது தோழியும் ஆபாச வார்த்தைகளிலும் போலீஸாரை திட்டியுள்ளனர். மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கூப்பிடவா என்றும் அந்த ஆண் சவால் விட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பலரும் கொதிப்படைந்தனர். இதையடுத்து மயிலாப்பூர் போலீஸார் சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகியோர் மீது, ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரமோகன் மற்றும் அவரது தோழி சில நாட்களுக்கு முன்னர் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இருவரின் ஜாமீன் மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து அந்த ஜோடி மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சந்திரமோகன் மட்டும் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விடுத்துள்ளது.
வெளியில் வந்த இருவரிடமும் எந்த யூடியூப் சானல் பேட்டி எடுத்து அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தப் போகிறதோ தெரியவில்லை.. பார்ப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}