சென்னை பீச்சில் அடாவடி செய்த ஜோடிக்கு ஹைகோர்ட் ஜாமீன்.. சந்திரமோகனுக்கு மட்டும் நிபந்தனை!

Nov 08, 2024,05:54 PM IST

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் லூப் கடற்கரையில், போலீஸாரிடம் நள்ளிரவில் அத்துமீறிய விவகாரத்தில் கைதான சந்திர மோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகியோருக்கு  ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதி மன்றம்.


சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் லூப் சாலையில் நள்ளிரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்திரமோகன் என்பவர் தனது சொகுசு காரை போக்குவரத்திற்கு இடஞ்சலாக நிறுத்தியுள்ளார். காரை எடுக்குமாறு ரோந்து போலீசார் கூறிய போது, சந்திரமோகனும் அவரது தோழியும் ஆபாச வார்த்தைகளிலும் போலீஸாரை திட்டியுள்ளனர். மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கூப்பிடவா என்றும் அந்த ஆண் சவால் விட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.




இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பலரும் கொதிப்படைந்தனர். இதையடுத்து மயிலாப்பூர் போலீஸார் சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி  ஆகியோர் மீது, ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்  கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரமோகன் மற்றும் அவரது தோழி  சில நாட்களுக்கு முன்னர் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் இருவரின் ஜாமீன் மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்தது.


இதனையடுத்து அந்த ஜோடி மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சந்திரமோகன் மட்டும் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விடுத்துள்ளது.


வெளியில் வந்த இருவரிடமும் எந்த யூடியூப் சானல் பேட்டி எடுத்து அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தப் போகிறதோ தெரியவில்லை.. பார்ப்போம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?

news

ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்

news

எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?

news

விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி

news

இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

news

திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!

news

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்

news

நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்