சென்னை: சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11 முதல் டிசம்பர் 16 வரை நடைபெறும் என சென்னை பல்கைலக்கழகம் அறிவித்துள்ளது.
மிச்சாங் புயல் ஏற்படுத்திய கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 4 மாவட்டங்களிலும் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மிகவும் சிரமம்பட்டு வந்தனர். அரசு போர்கால அடிப்படையில் பல நடவடிக்கைகளை எடுத்து அங்குள்ள மக்களை மீட்டு அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி வருகிறது. இந்நிலையில், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல உதவிகளை இங்குள்ள பொது மக்களுக்கு செய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இந்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புயல் வந்த நாள் முதல் இன்று வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. வெள்ள நீர் பதித்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அரையாண்டு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
சென்னை பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல், சென்னை பல்கைலக்கழகம் ஒத்தி வைத்திருந்தது. டிசம்பர் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. தற்பொழுது, டிசம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}