சென்னை: சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11 முதல் டிசம்பர் 16 வரை நடைபெறும் என சென்னை பல்கைலக்கழகம் அறிவித்துள்ளது.
மிச்சாங் புயல் ஏற்படுத்திய கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 4 மாவட்டங்களிலும் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மிகவும் சிரமம்பட்டு வந்தனர். அரசு போர்கால அடிப்படையில் பல நடவடிக்கைகளை எடுத்து அங்குள்ள மக்களை மீட்டு அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி வருகிறது. இந்நிலையில், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல உதவிகளை இங்குள்ள பொது மக்களுக்கு செய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இந்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புயல் வந்த நாள் முதல் இன்று வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. வெள்ள நீர் பதித்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அரையாண்டு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

சென்னை பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல், சென்னை பல்கைலக்கழகம் ஒத்தி வைத்திருந்தது. டிசம்பர் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. தற்பொழுது, டிசம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ
தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி
ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி
கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?
ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?
பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
இந்திய சீனியர் அணிக்கு வைபவ் வர முடியாது.. குறுக்கே நிற்கும் கெளஷிக் (ஐசிசி விதி)!
முகம்து சிராஜுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. ராணா வெளியேறினார்.. சிராஜுக்கு வாய்ப்பு!
{{comments.comment}}