சென்னை: சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11 முதல் டிசம்பர் 16 வரை நடைபெறும் என சென்னை பல்கைலக்கழகம் அறிவித்துள்ளது.
மிச்சாங் புயல் ஏற்படுத்திய கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 4 மாவட்டங்களிலும் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மிகவும் சிரமம்பட்டு வந்தனர். அரசு போர்கால அடிப்படையில் பல நடவடிக்கைகளை எடுத்து அங்குள்ள மக்களை மீட்டு அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி வருகிறது. இந்நிலையில், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல உதவிகளை இங்குள்ள பொது மக்களுக்கு செய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இந்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புயல் வந்த நாள் முதல் இன்று வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. வெள்ள நீர் பதித்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அரையாண்டு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

சென்னை பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல், சென்னை பல்கைலக்கழகம் ஒத்தி வைத்திருந்தது. டிசம்பர் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. தற்பொழுது, டிசம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}