சென்னை: சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 11 முதல் டிசம்பர் 16 வரை நடைபெறும் என சென்னை பல்கைலக்கழகம் அறிவித்துள்ளது.
மிச்சாங் புயல் ஏற்படுத்திய கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 4 மாவட்டங்களிலும் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மிகவும் சிரமம்பட்டு வந்தனர். அரசு போர்கால அடிப்படையில் பல நடவடிக்கைகளை எடுத்து அங்குள்ள மக்களை மீட்டு அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கி வருகிறது. இந்நிலையில், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல உதவிகளை இங்குள்ள பொது மக்களுக்கு செய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இந்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புயல் வந்த நாள் முதல் இன்று வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. வெள்ள நீர் பதித்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அரையாண்டு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

சென்னை பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல், சென்னை பல்கைலக்கழகம் ஒத்தி வைத்திருந்தது. டிசம்பர் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. தற்பொழுது, டிசம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
CM Vijay Swearing in: முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்.. அமைச்சர்களும் பதவியேற்பார்கள்
கிடைத்தது பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் நீங்கியது.. அடுத்து என்ன நடக்கும்?
தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்
DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!
மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்
சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!
தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!
தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்
நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!
{{comments.comment}}