சென்னை : இந்த ஆண்டு மகாளய அமாவாசை நாளில் சூரிய கிரகணமும் இணைந்து வருகிறது. இந்த சூரிய கிரகணமானது இந்தியாவில் இரவு நேரத்தில் ஏற்படுகிறது. இதனால் இதனை காண முடியாது. இதன் காரணமாக இந்தியாவில் சூரிய கிரகணத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
அதே சமயம், ஜோதிட ரீதியாக மகாளய அமாவாசையில் வரும் கிரகணம், கிரகங்களின் சேர்க்கை ஆகியவை சில பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும், இதற்காக பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. சூரிய கிரகண நாளில் வரும் மகாளய அமாவாசை எந்த ராசிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணம் வருவதால் சூரியன், சந்திரன், புதன் மற்றும் கேதுவின் சேர்க்கை ஏற்படுகிறது. இந்த நான்கு கிரகங்களும் கன்னி ராசியில் காலையில் உத்திரம் நட்சத்திரத்திலும், பிறகு அஸ்தம் நட்சத்திரத்தில் இணைய உள்ளன. சந்திரன், கன்னி ராசியில் நுழைவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு உடல் ரீதியான சில பாதிப்புக்களை ஏற்படுத்தும். அதனால் கன்னி ராசிக்காரர்கள் இந்த நாளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
இந்த பாதிப்புக்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று தேங்காய் சிதறு காய் விடுவது சிறப்பு. அல்லது மட்டை தேங்காய் வாங்கி, அதோடு பச்சரிசியை வைத்து இல்லாதவர்கள், கோவிலில் இருக்கும் அர்ச்சகர் என யாருக்காவது தானம் கொடுத்து விடுவது சிறப்பு. பச்சரிசி என்ற சந்திரனின் அம்சம் என்பதால் இது சந்திரனால் ஏற்படும் பாதிப்புக்களை நீக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கரூர் துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கரூர் துயர சம்பவம்... ஹேமமாலினி தலைமையில்... தேஜ கூட்டணியில் 8 பேர் கொண்ட குழு அமைப்பு
கரூர் கூட்ட நெரிசல்.. குற்றஞ்சாட்டப்பட்டவர்களே விசாரிக்கக்கூடாது.. சிபிஐ விசாரணை வேண்டும்: அன்புமணி
கரூரில் பாதிக்கப்பட்டோரை பார்க்க செல்கிறாரா விஜய்?... பாதுகாப்பு வழங்கக் கோரி மனு
டாக்டர் ராமதாஸை தைலாபுரம் சென்று சந்தித்த சி வி சண்முகம்.. அதிமுக கூட்டணியில் இணைவாரா?
கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?
கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி
யாரைக் குறை கூறுவது...?? யார் மீது குற்றம் சாட்டுவது..?? மக்களுக்கு ஏன் இந்த சினிமா மயக்கம் ..??
{{comments.comment}}