சென்னை : இந்த ஆண்டு மகாளய அமாவாசை நாளில் சூரிய கிரகணமும் இணைந்து வருகிறது. இந்த சூரிய கிரகணமானது இந்தியாவில் இரவு நேரத்தில் ஏற்படுகிறது. இதனால் இதனை காண முடியாது. இதன் காரணமாக இந்தியாவில் சூரிய கிரகணத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
அதே சமயம், ஜோதிட ரீதியாக மகாளய அமாவாசையில் வரும் கிரகணம், கிரகங்களின் சேர்க்கை ஆகியவை சில பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும், இதற்காக பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. சூரிய கிரகண நாளில் வரும் மகாளய அமாவாசை எந்த ராசிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணம் வருவதால் சூரியன், சந்திரன், புதன் மற்றும் கேதுவின் சேர்க்கை ஏற்படுகிறது. இந்த நான்கு கிரகங்களும் கன்னி ராசியில் காலையில் உத்திரம் நட்சத்திரத்திலும், பிறகு அஸ்தம் நட்சத்திரத்தில் இணைய உள்ளன. சந்திரன், கன்னி ராசியில் நுழைவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு உடல் ரீதியான சில பாதிப்புக்களை ஏற்படுத்தும். அதனால் கன்னி ராசிக்காரர்கள் இந்த நாளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
இந்த பாதிப்புக்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று தேங்காய் சிதறு காய் விடுவது சிறப்பு. அல்லது மட்டை தேங்காய் வாங்கி, அதோடு பச்சரிசியை வைத்து இல்லாதவர்கள், கோவிலில் இருக்கும் அர்ச்சகர் என யாருக்காவது தானம் கொடுத்து விடுவது சிறப்பு. பச்சரிசி என்ற சந்திரனின் அம்சம் என்பதால் இது சந்திரனால் ஏற்படும் பாதிப்புக்களை நீக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 15, 2025... இன்று நினைத்தது கைகூடும் நாள்
பீகார் தேர்தல்.. கருத்துக் கணிப்புகளை பொய்ப்பித்த Results.. வியத்தகு வெற்றி - ஒரு பார்வை!
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு
அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்
{{comments.comment}}