சென்னை : இந்த ஆண்டு மகாளய அமாவாசை நாளில் சூரிய கிரகணமும் இணைந்து வருகிறது. இந்த சூரிய கிரகணமானது இந்தியாவில் இரவு நேரத்தில் ஏற்படுகிறது. இதனால் இதனை காண முடியாது. இதன் காரணமாக இந்தியாவில் சூரிய கிரகணத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
அதே சமயம், ஜோதிட ரீதியாக மகாளய அமாவாசையில் வரும் கிரகணம், கிரகங்களின் சேர்க்கை ஆகியவை சில பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும், இதற்காக பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. சூரிய கிரகண நாளில் வரும் மகாளய அமாவாசை எந்த ராசிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணம் வருவதால் சூரியன், சந்திரன், புதன் மற்றும் கேதுவின் சேர்க்கை ஏற்படுகிறது. இந்த நான்கு கிரகங்களும் கன்னி ராசியில் காலையில் உத்திரம் நட்சத்திரத்திலும், பிறகு அஸ்தம் நட்சத்திரத்தில் இணைய உள்ளன. சந்திரன், கன்னி ராசியில் நுழைவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு உடல் ரீதியான சில பாதிப்புக்களை ஏற்படுத்தும். அதனால் கன்னி ராசிக்காரர்கள் இந்த நாளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
இந்த பாதிப்புக்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று தேங்காய் சிதறு காய் விடுவது சிறப்பு. அல்லது மட்டை தேங்காய் வாங்கி, அதோடு பச்சரிசியை வைத்து இல்லாதவர்கள், கோவிலில் இருக்கும் அர்ச்சகர் என யாருக்காவது தானம் கொடுத்து விடுவது சிறப்பு. பச்சரிசி என்ற சந்திரனின் அம்சம் என்பதால் இது சந்திரனால் ஏற்படும் பாதிப்புக்களை நீக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைச்சர்களின் இலாகாக்கள் வெளியீடு.. முதல்வர் வசம் இந்தத் துறைகள்.. மற்றவர்களுக்கு என்ன துறை?
செய்தியாளர்களைச் சந்திக்க முதல்வர் விஜய் தயங்குவது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை .. நடிகர் ரவிமோகன் அறிவிப்பு
உண்மையே எப்போதும் வெல்லும். ரவி மோகனுக்கு உடனடியாக பதில் கொடுத்த ஆர்த்தி
உடல் ஆரோக்கியமே ஆகச்சிறந்த செல்வம்!
கேட்கிறதா.. உற்றுக்கேள் என் தமிழினமே.. இனப்படுகொலை மே 18 ...
சூர்யா - ஜோதிகாவின் ரூ.200 கோடி ஆடம்பர பங்களா பற்றி இதெல்லாம் தெரியுமா?
தில்லாலங்கடி!
வியர்வை
{{comments.comment}}