மும்பை: மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜீத் பவார் பயணம் செய்த தனி விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த அஜீத் பவார் உள்ளிட்ட 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மும்பையிலிருந்து பாராமதிக்கு அஜீத் பவார் சிறிய ரக தனி விமானத்தில் பயணித்தார். விமானம் பாராமதியில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளாக்கி தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. விமானம் முழுமையில் தீயில் கருகிப் போனது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து அஜீத் பவார் உள்ளிட்ட அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் யாருமே உயிர் பிழைக்கவில்லை. ஆறு பேரும் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலை சுமார் 8:45 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. பாராமதி விமான நிலையத்திற்கு சற்று முன்பு விமானம் விபத்துக்குள்ளாக்கி தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்துக் கொண்டது.
விமானம் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும், விபத்தைத் தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜித் பவார் பாராமதியில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காகச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அஜீத் பவார், அவரது உதவியாளர், 2 தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள், 2 பைலட்டுகள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}