சென்னை: வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை அடித்து கொடுமைப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மெர்லினா. திருவான்மியூரில் உள்ள இவர்களது வீட்டில் ஒரு பெண் வேலைக்காக சேர்ந்துள்ளார். ஆண்டோ மற்றும் அவருடைய மனைவி மெர்லினா ஆகிய இருவரும் அந்த பெண்ணை வெளியில் விடாமல், தொடர்ந்து வேலை வாங்கி வந்ததாகவும், அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அந்த பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் வலுத்தன.
இந்நிலையில், ஆண்டோ மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக பாதிக்கப்பட்ட அந்த பெண் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அந்த வாக்குமூலத்தில் தன்னை நிர்வாணப்படுத்தி, உடலில் சூடுபோட்டு, கரண்டியால் மார்பில் அடித்ததாக அவர் கூறியிருந்தார். விசாரணைக்குப் பின்னர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரனைக்கு பின்னர் எம்எல்ஏவின் மகன் மருமகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் கடந்த 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா இருவரும் தலைமறைவாகினர். இவர்களை பிடிக்க மூன்று தனி படை அமைக்கப்பட்டது.
தனிப்படை பிரிவினர் விசாரித்ததில் இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருப்பது தெரியவந்தது. ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் எழும்பூர் காவல் நிலையத்திற்கு நீதிமன்ற நீதிபதி குடியிருப்பில் உள்ள நீதிபதி இல்லத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரையும் பிப்ரவரி 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அகமதாபாத் விமான விபத்து... ஏர் இந்தியா கருப்புப் பெட்டி கடும் சேதம்!
கமல் படத்தைத் தடுக்க உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?.. கன்னட அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!
கொமேனியைத் தெரியுமா.. ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள நெருக்கமான லிங்க்!
குடமுழுக்கு முழுமையாக தமிழில் நடத்தப்பட வேண்டும்... தமிழிலும் குடமுழுக்கு என்பது அவமானம்: சீமான்!
நம் சமையலறையில்.. ஏலக்காய்க்கு முக்கியத்துவம் ஏன் தெரியுமா.. இதாங்க காரணம்!
மீண்டும் தொடர் உயர்வில் தங்கம்... இன்றைக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
என்ன எழுதிருக்கீங்க?.. விசா கோரும் மாணவர்களிடம் சோசியல் மீடியா விவரம் கேட்கும் அமெரிக்கா!
பாகிஸ்தான் ராணுவத் தளபதியை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரில் அழைத்து விருந்து வைத்தது ஏன்?
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
{{comments.comment}}