கொச்சி: பொருளாதாரப் பிரச்சினையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துள்ளார்.
மலையாள சின்னத்திரையுலகில் பிரபலமானவர் ரெஞ்சுஷா மேனன். ஆரம்பத்தில் டிவி ஷோக்களில் ஆங்கராக வந்தவர் பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். கொச்சியைச் சேர்ந்த ரெஞ்சுஷா மேனன், ஸ்த்ரீ என்ற தொடர் மூலம் நடிகையாக அறிமுகமானார். அது மிகப் பிரபலமாகவே தொடர்ந்து பல தொடர்களில் நடித்தார் ரெஞ்சுஷா.
இதைத் தொடர்ந்து சிட்டி ஆப் காட், பாம்பே மார்ச், கார்யஸ்தன், அத்புத தீபு உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். மலையாள திரை மற்றும் சின்னத்திரை ரசிகர்களின் மனங்களிலும் தனக்கென தனி இடம் பிடித்தார்.
இதுபோக பல நெடுந்தொடர்களையும் இவர் தயாரித்துள்ளார். பரதநாட்டியத்திலும் சிறந்து விளங்கியவர் ரெஞ்சுஷா. இவரது கணவர் பெயர் மனோஜ் மேனன். இருவரும் கொச்சியில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் தங்கியிருந்தனர். சமீப காலமாக பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை ரெஞ்சுஷா சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் அவர் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது தற்கொலை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மலையாளத் திரையுலகம் மற்றும் சின்னத் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம்தான் அபர்ணா நாயர் என்ற மலையாள சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் ரெஞ்சுஷாவின் மரணம் சம்பவித்துள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்
விஜய் எங்கள் வீட்டுப்பிள்ளை... கூட்டணி குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!
விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடனா?: சீமான் கண்டனம்
முருக பக்தர்களுக்கு ஓர் நற்செய்தி: ஜூன் 22ல் மதுரையில் பிரம்மாண்டமாக முருகன் பக்தர்கள் மாநாடு!
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்.. குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்: முதலமைச்சர் முக ஸ்டாலின்
பட புரோமோஷனுக்காக புடவையில் வந்த கஜோல்... விலையை கேட்டால் அப்டியே மயங்கிருவீங்க!
கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!
{{comments.comment}}