புதுடில்லி: ஒரே ஆண்டில் 200 முறை விமானத்தில் பயணித்து திருட்டில் ஈடுபட்ட டெல்லி நபர் கைதாகியுள்ளார். இவர் கடந்த 4 ஆண்டுகளில் 2வது முறையாக கைதாகியுள்ளார்
டெல்லியை சேர்ந்தவர் ரஜேஷ் கபூர். 40 வயதாகும் இவர் ஒரே வருடத்தில் 200க்கும் மேற்பட்ட விமானத்தில் பயணித்து, சக பயணிகளின் உடைமைகளை திருடி வந்துள்ளார். இந்நிலையில், டெல்லி விமானத்தில் பயணித்த 2 பயணிகள், ரூ.27 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடு போனதாக புகார் அளித்தார்கள். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் 2 விமானத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் ராஜேஷ் கபூர் போலீசாரிடம் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தொடர்ந்து 20 வருடங்களாக இந்த திருட்டை செய்து வந்துள்ளார் இவர். திருடிய பொருட்களை வைத்து சொந்தமாக ஒரு ஹோட்டல் தொடங்கி நடத்தி வருகிறாராம். கடந்த 2019ம் ஆம்டு இவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையானார். மறுபடியும் இதே திருட்டில் இறங்கி விட்டார்.
ராஜேஷ் கபூர் மற்றும் அவரது நண்பர் செராக்ஸ் ஜெயின் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். திருட்டுத்தனத்திற்காக ஒரே நாளில் 2, 3 முறை கூட விமானத்தில் பயணம் செய்துள்ளாராம் ராஜேஷ் கபூர். இது குறித்து டெல்லி காவல் துறை துணை ஆணையர் உஷா ரங்னானி கூறுகையில், மூன்று மாத காலமாக டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் தங்களது உடைமைகளை இழந்தது தொடர்பாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தோம். இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் 11 தேதி ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட பயணி ஒருவர் ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான நகைகளை இழந்தார். இதுபோன்ற பிப்ரவரி 2 தேதி அமிர்தசரசில் இருந்து டெல்லிக்கு பயணித்த பயணி ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகளை இழந்துள்ளார்.
இதனை அடுத்து டெல்லி மற்றும் அமிர்தசரசில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் சி சி டிவி காட்சிகளிலும் ஒரே நபர் சந்தேகத்திற்கு இடமாக தோன்றினர்.பின்னர் அவரின் தொலைபேசி நம்பரை விமான நிலைய அலுவலகத்தில் பெற்றோம். ஆனால், அவர் ஒரு போலியான நம்பர் அளித்திருந்தார். தொடர்ந்து நாங்கள் நடத்திய விசாரணையில் அவர் ராஜேஷ் கபூர் என்பதும், அவருக்கு வயது 40 என்பதும் கண்டறிந்தோம்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருட்டுச் செயலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை திருடுவதை அவர் ஒரு வாடிக்கையாக கொண்டுள்ளார். வயதானவர்கள் தான் அவரது டார்கெட் பயணிகள். தங்கள் பைகளை வைக்கும் கேபினில் உள்ள பொருட்களை யாருக்கும் தெரியாமல் திருடுவது அவரது முதல் பணி. அது நடக்காத பட்சத்தில் குறிப்பிட்ட பயணிகளை டார்கெட் செய்து அவர்களுக்கு அருகில் அமர்ந்த பொருட்களை திருடியுள்ளார் என்றார் அவர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}