கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்.. பழிக்குப் பழியாக.. காதலனின் மனைவியை மணந்த கணவன்!

Mar 04, 2023,11:23 AM IST
பாட்னா: பீகாரில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. தனது மனைவி, இன்னொரு ஆணுடன் வீட்டை விட்டு ஓடிப் போனதால் ஆத்திரமடைந்த கணவன், அந்த கள்ளக்காதலனின் மனைவியை மணந்து பழி தீர்த்துள்ளார்.



பீகாரின் ககரியா மாவட்டத்தில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது.  ககரியாவைச் சேர்ந்தவர் நீரஜ். இவருக்கும் ரூபி தேவி என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நான்கு பிள்ளைகளும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு அதே ஊரைச் சேர்ந்த முகேஷ் என்பவரின் மனைவியுடன் நீரஜ் கள்ளக்காதலில் ஈடுபட்டார்.




இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் அதிரடியான ஒரு காரியத்தில் இறங்கினார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூபி தேவியை திருமணம் செய்து கொண்டார் முகேஷ். இதை அறிந்த நீரஜ் அதிர்ச்சி அடைந்தார். போலீஸில் புகார் கொடுத்தார். அதில் தனது மனைவியை முகேஷ் கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்து விட்டதாக அவர் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டியதாகவும், ஆனால் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை பின்பற்றாமல் முகேஷ் தலைமறைவாகி விட்டதாகவும் நீரஜ் கூறியுள்ளார். முகேஷுக்கும் அவரது மனைவிக்கும் 2 பிள்ளைகள் உள்ளனர். இதில் என்ன தமாஷ் என்றால் முகேஷின் மனைவி பெயரும் ரூபி தான். 

இந்த விவகாரத்தில் தற்போது இன்னொரு திருப்பமாக, முகேஷின் மனைவியை நீரஜ் கடந்த பிப்ரவரி மாதம் மணந்து கொண்டு மனைவியாக்கி விட்டார்.  இப்படி இந்தத் தம்பதிகள் மாறி மாறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Ceasefire Violation: இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி விட்டன.. அதிபர் டிரம்ப்

news

திருச்செந்தூர் குடமுழுக்கு தமிழில் நடக்கும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

news

மக்கள் அதிகம் கூடும் இடங்கள் சாலையோரங்களில் பேனர்கள் வைக்க வேண்டாம்: தவெக!

news

Chennai metro: சென்னையில் விரைவில்... பஸ், ரயில், மெட்ரோவில் பயணிக்க ஒரே டிக்கெட்!

news

வைட்டமின் சி ரொம்ப ரொம்ப முக்கியம்.. எதற்காக தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்?

news

மும்பையில் வீடு வாங்கணுமா?.. அப்டின்னா நீங்க இன்னும் 100 வருடங்கள் சேமிக்கணும்!

news

எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. சாகாவரம் படைத்த கண்ணதாசன்!

news

சென்னை மாநகராட்சிக்கு தெரியாமல் வாகன நிறுத்துமிடம் கட்டிக் கொடுத்தது யார்? டாக்டர் அன்புமணி கேள்வி!

news

போலிப் பாசம் தமிழுக்கு... பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு... முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்