7 விக்கெட் எடுத்தாக வேண்டும்.. இல்லாவிட்டால் வரலாற்றுப் பழிகள் உண்டு.. மனுஷ்யபுத்திரன் நச் கவிதை!

Nov 16, 2023,02:38 PM IST
சென்னை: முகம்மது ஷமியை வைத்து ஒரு அட்டகாசமான கவிதையைத் தீட்டியுள்ளார் கவிஞர் மனுஷ்யபுத்திரன்.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் ஆரம்ப கட்டப் போட்டிகளில் முகம்மது ஷமிக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஹர்டிக் பாண்ட்யா காயமடைந்து விளையாட முடியாமல் போனதால்தான் ஷமிக்கு வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை அவர் கெட்டியாக பிடித்துக் கொண்டு புயலாக மாறி இந்திய அணிக்கு லட்டு போல வெற்றிகளைத் தேடிக் கொடுத்து வருகிறார்.

நேற்றைய போட்டியில் விஸ்வரூபம் எடுத்த அவர் 7 விக்கெட்களை வீழ்த்தி அசகாய சாதனை படைத்தார். இந்த நிலையில் முகம்மது ஷமியை வைத்து ஒரு கவிதை தீட்டியுள்ளார் மனுஷ்ய புத்திரன்.



அவரது கவிதை இதோ:

முகமது ஷமி 
அரை இறுதியில்
ஏழு விக்கெட்டுகள் எடுக்கிறான்
ஒரு கேட்சை தவறவிட்டதற்காக
அவன் ஏழு விக்கெட்டுகள்
எடுத்தாக வேண்டும்
தன்னை நிரூபித்தாகவேண்டும்
இல்லாவிட்டால் தண்டனைகள் உண்டு
வரலாற்றுப் பழிகள் உண்டு
வெளியேறுவதற்கான
திறந்த வாயில்கள் உண்டு

வேறு சிலருக்கு அப்படியில்லை
தவறுகளின் சலுகைகள் 
அவர்களுக்கு உண்டு
திறமையின்மைகளின் கருணை
அவர்களுக்கு உண்டு

தினம் தினம் 
தன்னை நிரூபிக்க வேண்டியிருப்பவர்கள்
அனைவருமே களைப்பாக உணர்கிறார்கள்

தினமும் தங்கள் 
அன்பை நிரூபிக்க வேண்டியவர்கள்
காதலை நிரூபிக்க வேண்டியவர்கள்
பொறுப்பை நிரூபிக்க வேண்டியவர்கள்
விசுவாசத்தை நிரூபிக்கவேண்டியவர்கள்
ஆரோக்கியத்தை நிரூபிக்க வேண்டியவர்கள்
தகுதியை நிரூபிக்க வேண்டியவர்கள்
தேசபக்தியை நிரூபிக்கவேண்டியவர்கள்
கற்பை நிரூபிக்க வேண்டியவர்கள்
திறமையை நிரூபிக்க வேண்டியவர்கள்
எல்லோருமே களைப்பாக உணர்கிறார்கள்

அவர்கள்  தினம் தினம் 
தேர்வுகள் எழுதவேண்டும்
தினம் தினம்
நூறு மதிப்பெண்கள் பெறவேண்டும்
99 மதிப்பெண்கள் கூட
அதிருப்தியுடன்தான் ஏற்கப்படுகின்றன

தினம் தினம் 
தன்னை நிரூபிக்கவேண்டிய ஒருவர்
தன்னால்தான் இந்த மழையில்
முழுமையாக நனைய முடியும் என நிரூபிக்க
மழையோடு மழையாக நடந்து செல்கிறார்

நேற்று இரண்டு முறை
நிரூபித்துவிட்டு
இன்று எதையும் நிரூபிக்காமல் 
இருக்கட்டுமா என்று கேட்டால்
அதைக் கணக்கில் 
வரவு வைத்துக்கொள்ள மாட்டார்கள்

நான் என் பிரியத்தை 
தினம் தினம் நிரூபிக்க
இன்று வேறொரு பரிசுகள் விற்கும்
கடைமுன் நின்றுகொண்டிருக்கிறேன்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்