திருவெம்பாவை பாசுரம் 02 :
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்
பொருள் :
நாம் இரவு பகலாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம், நான் ஜோதி மயமான சிவ பெருமான் மீது அளவில்லாத பாசம் வைத்துள்ளேன் என்று வீரமாக பேசுவார். இப்போது நீராடி விட்டு, அவரை வழிபட அழைத்தால் வராமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்கிறார்கள் தோழியர். அதற்கு வீட்டிற்குள் இருந்து பதிலளிக்கும் தோழி, ச்சீ...இது என்ன கேலி பேச்சு. கண் அயர்ந்து விட்டதற்காக இப்படி பேசலாமா? என்கிறாள். அதற்கு தோழியர்கள், தேவர்களும் கூட தேடி வழிபட முடியாத சிவனின் மலர் பாதங்களை காட்டி, நமக்கு அருள் செய்ய அவர் காத்துக் கொண்டிருக்கிறார்.
சிவலோகத்தில் இருக்கும் அனைவரின் அன்புரிய இறைவன் தில்லை சிதம்பரத்தில் நடம் புரிபவனான ஈசனை காண்பதற்காக நாம் செய்ய வேண்டும் சீக்கிரம் வா என்கின்றனர்.
விளக்கம் :
தேவர்களும் கூட காண கிடைக்காதவர் சிவ பெருமான். அவர் நமக்கு அருள் செய்வதற்காக எப்போது தயாராக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அது புரியாமல் உலக மாயையில், ஆசைகளில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த உலக ஆசைகளில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள, யாருக்கும் கிடைப்பதற்கு அரிதான இறைவனின் அருளையும், முக்தியை அடைவதற்கு இறைவனை சரணாகதி அடைய வேண்டும். அதுவே வாழ்வின் நோக்கம் என்பதை உலக மக்களுக்கு புரிய வைக்கிறார் மாணிக்க வாசகர்.
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}