திருவெம்பாவை பாசுரம் 01:
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய்
விதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய்.

பொருள் :
ஆரம்பமும் முடிவும் இல்லாத மிகப் பெரிய ஒளியின் வடிவமாக விளங்கக் கூடிய இறைவனை நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். கூர்மையான வாள் போன்ற கண்களை உடைய பெண்ணே, இந்த பாடலை கேட்ட பிறகும் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாயே. உன்னுடைய காதுகள் என இரும்பால் செய்யப்பட்டதா? நாங்கள் பாடுவது உன்னுடைய காதுகளில் விழவில்லையா? என முதல் தோழி, வீட்டிற்குள் இருக்கும் பெண்ணை பார்த்து பாடுனதாக மாணிக்கவாசகர் பாடி உள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக மற்றொரு தோழி, நீ பாடுவது காதில் விழாமல் இல்லை இறைவனின் திருநாமத்தால் உணர்ச்சிவசப்பட்டு, அவள் விம்மி,விம்மி அழுது கொண்டிருக்கிறாள். தன்னையும் மறந்து பக்தி பெருக்காமல் அவள் அழுதை அறியாமல் தவறாக பேசுவது சரிதோனோ என்கிறாள்.
விளக்கம் :
மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விட மாட்டோம்: சட்டசபையில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சு...எக்ஸ்தளத்தில் கவுன்ட்டர் கொடுத்த உதயநிதி
முதல்வர் விஜய் சொன்ன 'பார்ட்டி ஃபண்ட்'...திமுக கொந்தளித்து வெளிநடப்பு செய்தது ஏன்?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை வெள்ளை அறிக்கை ஜூன் 25-ல் வெளியீடு: அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு
திருவள்ளூர் அமோனியா கசிவு விவகாரம்: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
அலைபேசி பேச்சு
அது ஒரு அழகிய மழைக்காலம்
{{comments.comment}}