திருப்பாவை பாசுரம் 02 :
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
சையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றறோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.

பொருள் :
உலகத்தில் உள்ளவர்ளே! நாம் அனைவரும் பாற்கலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனின் அருளைப் பெற வேண்டும், அவரது திருவடியை சேர வேண்டும் என்றால் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்பதை சொல்கிறேன் கேளுங்கள். நெய், பால் போன்ற நாவிற்கு சுவையான உணவுகளை உண்ணாமல், தினமும் குளித்து விட்டு கண்களுக்கு மையிட்டும், தலையில் பூ வைத்தும் நம்மை அலங்கரிப்பதில் கவனம் செலுத்தாமலும், செய்யக் கூடாது என சொல்லப்பட்டுள்ள தீய செயல்களை செய்யாமலும், யாரை பற்றியும் தீய சொற்களை பேசாமலும், நம்மை தேடி வரும் அடியார்கள், துறவிகள், முனிவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போதும் என மனநிறைவு பெறும் வரை உணவு கொடுத்து உபசரிக்கவும் வேண்டும்.
விளக்கம் :
பக்தி, விரதம் என்றாலே அதற்கும் விதிமுறைகள் உண்டு. இறைவனின் அருளை பெற வேண்டும் என்றால் இந்த விரதத்தை எப்படி இருக்க வேண்டும்? விரதம் இருக்கும் காலத்தில் எதை எல்லாம் செய்ய வேண்டும். எவற்றை எல்லாம் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்பதை தான் ஆண்டாள் நாச்சியார் இந்த பாடலில் தெளிவுபடுத்தி உள்ளார். வெறும் உணவு சாப்பிடாமல் இருப்பதும், கோவிலுக்கு செல்வதும் மட்டும் விரதம் கிடையாது. விரதம் இருப்பவர்கள் தனக்கென சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு இறைவனை மட்டுமே மனம் நினைக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்துள்ளார் ஆண்டாள் நாச்சியார்.
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
{{comments.comment}}