திருப்பாவை பாசுரம் 02 :
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
சையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றறோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.

பொருள் :
உலகத்தில் உள்ளவர்ளே! நாம் அனைவரும் பாற்கலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனின் அருளைப் பெற வேண்டும், அவரது திருவடியை சேர வேண்டும் என்றால் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்பதை சொல்கிறேன் கேளுங்கள். நெய், பால் போன்ற நாவிற்கு சுவையான உணவுகளை உண்ணாமல், தினமும் குளித்து விட்டு கண்களுக்கு மையிட்டும், தலையில் பூ வைத்தும் நம்மை அலங்கரிப்பதில் கவனம் செலுத்தாமலும், செய்யக் கூடாது என சொல்லப்பட்டுள்ள தீய செயல்களை செய்யாமலும், யாரை பற்றியும் தீய சொற்களை பேசாமலும், நம்மை தேடி வரும் அடியார்கள், துறவிகள், முனிவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போதும் என மனநிறைவு பெறும் வரை உணவு கொடுத்து உபசரிக்கவும் வேண்டும்.
விளக்கம் :
பக்தி, விரதம் என்றாலே அதற்கும் விதிமுறைகள் உண்டு. இறைவனின் அருளை பெற வேண்டும் என்றால் இந்த விரதத்தை எப்படி இருக்க வேண்டும்? விரதம் இருக்கும் காலத்தில் எதை எல்லாம் செய்ய வேண்டும். எவற்றை எல்லாம் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்பதை தான் ஆண்டாள் நாச்சியார் இந்த பாடலில் தெளிவுபடுத்தி உள்ளார். வெறும் உணவு சாப்பிடாமல் இருப்பதும், கோவிலுக்கு செல்வதும் மட்டும் விரதம் கிடையாது. விரதம் இருப்பவர்கள் தனக்கென சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு இறைவனை மட்டுமே மனம் நினைக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்துள்ளார் ஆண்டாள் நாச்சியார்.
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}