- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ வீரமணிகண்டன்
மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா? கேக்கவே ஆச்சரியமா இருக்குல்ல.. ஆனால் நீங்க நம்பாட்டியும் அதுதான் நெசம்!
நமது வீட்டில் மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு ஓவன் இல்லாமல் எளிய முறையில் ரவா கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
ரவா கேக் செய்ய தேவையான பொருட்கள்:

ரவா – 2 கப்
சர்க்கரை – 1 கப்
தயிர் – 1/4 கப்
நெய் – 4 டீஸ்பூன்
பால் – 1/2 கப்
பேக்கிங் பவுடர் – 1/2டீஸ்பூன்
முந்திரி - நமது தேவைக்கேற்ப
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் – 1 டீஸ்பூன்( இருந்தால் பயன்படுத்தலாம்)
உப்பு – ஒரு சிட்டிகை
நறுக்கிய கொசு (ஆப்ஷனல்)
செய்முறை:
தயாரிப்பு:
ரவா மற்றும் சீனியை மிக்ஸியில் கொர கொர என அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் காய்சியப் பால், தயிர், சோடா உப்பு, நெய் போன்றவற்றை ஊற்றி நன்றாக கலக்கி பத்து நிமிடம் ஊற வைத்து விட வேண்டும்.
கேஸ் அடுப்பில் ஒரு கனத்த சட்டியை வெறும் சட்டியாக 5 நிமிடம் வைத்தபிறகு அதன் மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் ஒரு தட்டில் நாம் தயாராக வைத்த கலவையை ஊற்றிய பிறகு மிகவும் சிறிதாக நறுக்கிய முந்திரிப் பருப்பை மேலே தூவி வைக்க வேண்டும். சரியாக 30 நிமிடங்கள் மேலே ஒரு தட்டை போட்டு மூடி வைத்துவிட வேண்டும்.
ஐந்து நிமிடம் கழித்து நாம் அதை திறந்து பார்த்தால் மிகவும் சுவையான மற்றும் சாப்டான ரவா கேக் ரெடியாக இருக்கும்.

வெண்ணிலா எசன்ஸ் ஊற்றாமலே கேக் சுவையாக இருந்தது.
நமது பிறந்தநாள் போன்ற சுப நிகழ்வுகளில் கடைகளில் வாங்காமல் வீட்டிலே செய்து சாப்பிடுவோம்.
(வீ.யோகாஸ்ரீ, அஞ்சல் அட்டையில் 1330 திருக்குறளை எழுதி முப்பால் விருது பெற்றுள்ளார். வண்ணத்துப்பூச்சிகள் 2025 முப்பெரும் விழாவில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது பெற்றுள்ளார். கலைத் திருவிழாவில் மாறுவேடம் மற்றும் தனிநபர் நடிப்பில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பேச்சுப் போட்டியில் சுதந்திரா சொற்சுடர் விருது பெற்றுள்ளார் . தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் 3 முறை உலக சாதனை செய்துள்ளார்)
இது GenZ காலம்.. திருமணங்களுக்கு முற்றுப்புள்ளியா?
சிந்தனைச் சிதறல்.. இருக்கும் வரை தாங்கிப் பிடிப்போம்!
கோவில் மணி.. Temple bell.. அடிப்பதால் என்னெல்லாம் சிறப்பு இருக்கு தெரியுமா?
விளையும் பயிர்!
சொல்லாமலே புரியும் அன்னை வீடு… சொல்லியும் புரியாத புகுந்த வீடு!
Mayiladuthurai Kitchen: மைக்ரோவேவ் இல்லாமல் ரவா கேக்கா?.. ஆமாங்க ஆமா!
படைப்பாற்றல்!
Srirpiya Short Story: நிழலும் நிலவுமாய்..!
உங்க வாழ்க்கையை முழுமையாக வாழுங்க.. Let your life be the proof
{{comments.comment}}