சென்னை: தமிழகத்தில் இன்று பகல் 1 மணி வரையிலும் 16 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள வானிலை நிலவரப்படி, தமிழகத்தில் இன்று பகல் 1 மணி வரையிலும் 16 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட12 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இன்றைய தினத்தை பொருத்தவரைக்கும் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு நேற்றே ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று கன மழை முதல் அதி கனமழை எதிர்பார்க்கப்படுவதால், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளுக்கான அபாயம் காணப்படுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து கோவை, நீலகிரி மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இன்று குறித்து நேற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழை பதிவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக பொதுமக்கள் அவசர தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}