புயல் பாதித்த மாவட்டங்களில்.. ஜனவரிக்குத் தள்ளிப் போகும் அரையாண்டு தேர்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ்

Dec 04, 2024,05:59 PM IST

சென்னை: புயலால் கனமழை பெய்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருப்பதால் அந்த மாவட்டங்களில் ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மற்ற மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு வழக்கம் போல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்தாண்டும் டிசம்பர் 16ம் தேதி தொடங்கி டிசம்பர் 24ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தன. அரையாண்டு தேர்வு நெருங்கி வருவதை முன்னிட்டு மாணவர்கள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.




இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஃபெஞ்சல் புயல் காரணமாக வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்  கனமழை பெய்து ஒரு வழி செய்து விட்டு போயுள்ளது. அதிலும் குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் புயல் தனது கோர தாண்டவத்தை காண்பித்துள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் வீடுகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் மீட்பு பணிகள் தற்போது நடத்து வருகின்றன. இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள அரையாண்டு தேர்வு குறித்து சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பேசுகையில், அரையாண்டு தேர்வுகளுக்கான படங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிசம்பர் 9ம் தேதிக்குள் நிலைமை சீரடையாவிட்டால், அந்த பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் எழுதுவதற்கு அறிவுறுத்தி இருக்கிறோம். 


இது குறித்த அந்தந்தத பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்வார்கள். டிசம்பர் 2ம் தேதி தொடங்க இருந்த செய்முறை தேர்வு வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும் ஜனவரி முதல் வாரத்தில் நடத்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்களை பொருத்தவரை மாணவர்களின் பாதுகாப்பு தான் முதலில். கண்டிப்பாக முறையான முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்