சென்னை: புயலால் கனமழை பெய்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருப்பதால் அந்த மாவட்டங்களில் ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மற்ற மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு வழக்கம் போல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்தாண்டும் டிசம்பர் 16ம் தேதி தொடங்கி டிசம்பர் 24ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தன. அரையாண்டு தேர்வு நெருங்கி வருவதை முன்னிட்டு மாணவர்கள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஃபெஞ்சல் புயல் காரணமாக வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து ஒரு வழி செய்து விட்டு போயுள்ளது. அதிலும் குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் புயல் தனது கோர தாண்டவத்தை காண்பித்துள்ளது. இதனால், இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் வீடுகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் மீட்பு பணிகள் தற்போது நடத்து வருகின்றன. இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள அரையாண்டு தேர்வு குறித்து சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், அரையாண்டு தேர்வுகளுக்கான படங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிசம்பர் 9ம் தேதிக்குள் நிலைமை சீரடையாவிட்டால், அந்த பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் எழுதுவதற்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.
இது குறித்த அந்தந்தத பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்வார்கள். டிசம்பர் 2ம் தேதி தொடங்க இருந்த செய்முறை தேர்வு வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் மட்டும் ஜனவரி முதல் வாரத்தில் நடத்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்களை பொருத்தவரை மாணவர்களின் பாதுகாப்பு தான் முதலில். கண்டிப்பாக முறையான முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
மனதில் உறுதி வேண்டும்.. நினைவு நல்லது வேண்டும்!
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சிந்தனைச் சிதறல்.. அனைவருக்கும் பயன்பட வாழ்தலே சிறப்பு!
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}