தமிழ்நாடு, பீகார், மே. வங்காள தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

Sep 25, 2025,03:38 PM IST

புது டெல்லி:  பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.


இதில் தமிழ்நாட்டுடன் கல்வி நிதி தொடர்பாக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்தி பிரதான் பீகார் மாநில பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதேசமயம், அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில் இந்த மாநிலங்களுக்கான மேலிடப் பார்வையாளர்களை பாஜக நியமித்துள்ளது.




பீகார் தேர்தலுக்கு தர்மேந்திர பிரதானை பொறுப்பாளராக பாஜக நியமித்துள்ளது. சி.ஆர். பாட்டில் மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 


தமிழக தேர்தலுக்கு பைஜயந்த் பாண்டாவை தேர்தல் பொறுப்பாளராக பாஜக மேலிடம் நியமித்துள்ளது. முரளிதர் மோஹோல் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்காளத்திற்கு பூபேந்திர யாதவ் தேர்தல் பொறுப்பாளராகவும், பிப்லாப் குமார் தேப் இணைப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்

news

மோட்சத்திற்கு வழிகாட்டும் வைகுண்ட ஏகாதசி விரதம்!

news

2026ம் ஆண்டு என்ன நடக்கும்?...பாபா வாங்காவின் பகீர் கிளப்பும் கணிப்புகள்

news

பிரச்சினைகள் நீங்கி இன்பமான வாழ்வு பெற ஏகாதசி விரதம் இருப்பது சிறப்பு!

news

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

சபரிமலை மண்டல பூஜை காலத்தில் ரூ.332.77 கோடி வருமானம்

news

மலேசியா என்றதும் இனி பிரகாஷ் ராஜ் ஞாபகமும் வரும்.. பார்த்திபன் போட்ட பலே டிவீட்!

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைவு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 29, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்

அதிகம் பார்க்கும் செய்திகள்