தமிழ்நாடு, பீகார், மே. வங்காள தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

Sep 25, 2025,03:38 PM IST

புது டெல்லி:  பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.


இதில் தமிழ்நாட்டுடன் கல்வி நிதி தொடர்பாக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்தி பிரதான் பீகார் மாநில பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதேசமயம், அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இந்த நிலையில் இந்த மாநிலங்களுக்கான மேலிடப் பார்வையாளர்களை பாஜக நியமித்துள்ளது.




பீகார் தேர்தலுக்கு தர்மேந்திர பிரதானை பொறுப்பாளராக பாஜக நியமித்துள்ளது. சி.ஆர். பாட்டில் மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 


தமிழக தேர்தலுக்கு பைஜயந்த் பாண்டாவை தேர்தல் பொறுப்பாளராக பாஜக மேலிடம் நியமித்துள்ளது. முரளிதர் மோஹோல் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்காளத்திற்கு பூபேந்திர யாதவ் தேர்தல் பொறுப்பாளராகவும், பிப்லாப் குமார் தேப் இணைப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!

news

இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு

news

நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!

news

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்

news

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?

news

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

news

மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்