வேலூர்: விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள். ஆனால் தேவையில்லாமல் காவல்துறை யாரையும் கைது செய்வதில்லை. ஆதாரம் இருந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த 27ம் தேதி கரூரில் நடந்த தவெக தலைவரின் பிரச்சாரத்தின் போது, 41 பேர் பலியான சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் தவெக கட்சியின் தலைவர் விஜய்க்கு நீதிமன்றம் தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு பதில் கூற முடியாத சூழல் தவெகவிற்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் சொல்வது தான் மெயின். நீதிபதிகள் உண்மையை சொல்லி உள்ளார்கள். கள்ளக்குறிச்சி சம்பவத்தின்போது இருந்த சூழல் வேறு; கரூரில் 41 பேர் பலியானது சாதாரணம் அல்ல. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிபதி என்ன கூறினாலும் அது குறித்து நாம் எதுவும் சொல்ல முடியாது.
விஜய்யை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள். ஆனால் தேவையில்லாமல் காவல்துறை யாரையும் கைது செய்வதில்லை. ஆதாரம் இருந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார். ஒரு கட்சியின் தலைவர் அவரது கட்சிக்கேற்ப பேசுகிறார். கரூர் விவகாரத்தில் செந்தில் பாலாஜியை யாரும் குறை சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.
என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆவேசம், அடுக்கடுக்கான கேள்விகள்...வேலூரில் கொந்தளித்த விஜய்...கோபத்திற்கு இது தான் காரணமா?
தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் 2026 வெளியீடு...மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்
விஜய்க்கு எங்கு சென்றாலும் வேல் பரிசு...பாஜக ஓட்டுக்களை குறி வைக்கிறதா தவெக?
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு என்ன தெரியுமா?
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026: யாருக்கு லாபம்? பாதிக்கப்பட போகும் ராசிகள் யார்?
ஜெயலலிதா இடத்தில் விஜய்...செங்கோட்டையனின் சட்டை பையை கவனிச்சீங்களா?
தமிழகத்தில் மாவட்ட வாரியான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
வேலூரில் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
{{comments.comment}}