சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு தற்போது உடல் நலக் குறைவால் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஏற்கனவே நெஞ்சு வலி காரணமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அமைச்சர் கே என் நேருவும் உடல் நலக்குறைவால் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார் அமைச்சர் கே என் நேரு. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் கடந்த சில நாட்களாகவே அமைச்சர் கே என் நேரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மும்மரமாக கண்காணித்து வருகிறார். இதற்கிடையே இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அமைச்சருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . இதனையடுத்து அமைச்சர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அப்போலோ நிர்வாகத்தில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியானது.. தேர்ச்சி விகிதம் மொத்தம் 92.09% !
தமிழ்நாட்டில்.. மே மாத இறுதியில் கோடை வெயில்.. இயல்பை விட குறையும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
தமிழகத்தில் 10வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. வழக்கம் போல மாணவியரே அதிகம் பாஸ்!
பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!
என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு
cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்
இந்தியாவில் அமலுக்கு வந்தது.. பயோ மெட்ரிக் விவரங்கள் அடங்கிய இ-பாஸ்போர்ட்..!
{{comments.comment}}