சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு தற்போது உடல் நலக் குறைவால் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஏற்கனவே நெஞ்சு வலி காரணமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அமைச்சர் கே என் நேருவும் உடல் நலக்குறைவால் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார் அமைச்சர் கே என் நேரு. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் கடந்த சில நாட்களாகவே அமைச்சர் கே என் நேரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மும்மரமாக கண்காணித்து வருகிறார். இதற்கிடையே இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அமைச்சருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . இதனையடுத்து அமைச்சர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அப்போலோ நிர்வாகத்தில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}