சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு தற்போது உடல் நலக் குறைவால் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஏற்கனவே நெஞ்சு வலி காரணமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அமைச்சர் கே என் நேருவும் உடல் நலக்குறைவால் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார் அமைச்சர் கே என் நேரு. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் கடந்த சில நாட்களாகவே அமைச்சர் கே என் நேரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மும்மரமாக கண்காணித்து வருகிறார். இதற்கிடையே இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அமைச்சருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . இதனையடுத்து அமைச்சர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அப்போலோ நிர்வாகத்தில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்
4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை
ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
{{comments.comment}}