சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு தற்போது உடல் நலக் குறைவால் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஏற்கனவே நெஞ்சு வலி காரணமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது அமைச்சர் கே என் நேருவும் உடல் நலக்குறைவால் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார் அமைச்சர் கே என் நேரு. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் கடந்த சில நாட்களாகவே அமைச்சர் கே என் நேரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மும்மரமாக கண்காணித்து வருகிறார். இதற்கிடையே இவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அமைச்சருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . இதனையடுத்து அமைச்சர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அப்போலோ நிர்வாகத்தில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}