22 ஆண்டுகளாக நடந்த வழக்கில்.. இன்று தீர்ப்பு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுதலை!

Jan 10, 2025,08:21 PM IST

சென்னை: அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உட்பட அனைவரையும் விடுதலை செய்து எம்.பி., எல்.எல்.ஏ., க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.


கடந்த 2002ம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் அப்போது துணைமேயராக இருந்த கராத்தே தியாகராஜன் தலைமையில் நடந்தது. அப்போது, மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக  எதிர்கட்சியாக இருந்த திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில்  அதிமுக உறுப்பினர்களான ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்கரசி, குமாரி உள்ளிட்ட பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.




இது தொடர்பாக, அதிமுக உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மன்ற செயலாளர்கம் சென்னை பெரியமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது அமைச்சராக இருக்கும் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேர் மீது இரண்டு வழக்குகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு காவல்துறையால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு தூசி தட்டப்பட்டது.


இந்த வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் 70க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் திர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றங்கள் எதுவும் சரிவர நிருபிக்கப்படாத காரணத்தினால், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரை விடுதலை செய்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 22, 2025... இன்று பணவரவு அதிகரிக்கும்

news

வானிலை கொடுத்த அப்டேட்.. இன்றும், நாளையும் எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?

news

மதுரையின் வளர்ச்சிக்கு போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெரிவோம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு!

news

அரசியல் கட்சிகளுக்கான SOP ரெடி.. உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழ்நாடு அரசு!

news

திமுக அரசு ₹4,000 கோடியில் ஊழல் செய்வதற்கு மட்டுமே, விதிகளை மீறி கால நீட்டிப்பு செய்கிறது: அண்ணாமலை

news

பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!

news

17 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகள்

news

மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகம் செய்கிறது திமுக அரசு –அன்புமணி ராமதாஸ் வேதனை

news

சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதி மன்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்