சென்னை: அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உட்பட அனைவரையும் விடுதலை செய்து எம்.பி., எல்.எல்.ஏ., க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் அப்போது துணைமேயராக இருந்த கராத்தே தியாகராஜன் தலைமையில் நடந்தது. அப்போது, மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக எதிர்கட்சியாக இருந்த திமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் அதிமுக உறுப்பினர்களான ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்கரசி, குமாரி உள்ளிட்ட பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக, அதிமுக உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மன்ற செயலாளர்கம் சென்னை பெரியமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது அமைச்சராக இருக்கும் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேர் மீது இரண்டு வழக்குகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு காவல்துறையால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு தூசி தட்டப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் 70க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் திர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றங்கள் எதுவும் சரிவர நிருபிக்கப்படாத காரணத்தினால், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரை விடுதலை செய்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
{{comments.comment}}