உடல்பருமன் குறைப்பு அறுவை சிகிச்சையின்போது இளைஞர் மரணம்.. விசாரிப்போம்.. அமைச்சர் தகவல்

Apr 25, 2024,05:57 PM IST

புதுச்சேரி: உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.


உடல் பருமன் இன்றைய பெரும்பாலான மக்களுக்கு உள்ள பிரச்சனைகளிலில் ஒன்று. ஆண், பெண் என இரு பிரிவினர்களும் இந்த உடல் பருமனால் பாதிக்கப்பட்டு அவதி பட்டு வருகின்றனர். இதற்கு பல வகைகளில் தீர்வு உண்டு என்று கூறப்பட்டாலும், அவை ஆபத்து நிறைந்தவையாகவே இருக்கின்றன. அப்படி தான் புதுச்சேரி முத்தியால்பேட்டை நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு  ஹேமசந்திரன் மற்றும் ஹேமராஜன் என 26 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். 




இவர்களில் ஹேமச்சந்திரன் உடல் பருமனாக இருப்பதால் சென்னையில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 256 கிலோ உடைய ஹேமச்சந்திரனுக்கு  நேற்று அறுவை சிகிச்சை வயிலாக உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க முடிவு செய்திருந்தனர் மருத்துவர்கள். ஆனால் அறுவை சிகிச்சை தொடங்கி  15 நிமிடங்களில் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 


கார்டியாக் அரெஸ்ட் காரணமாக அவர் இறந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த இவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.  புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உடல் பருமனை குறைக்க சென்றவர் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த இளைஞரின் உறவினர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க உத்தரவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்