புதுச்சேரி: உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.
உடல் பருமன் இன்றைய பெரும்பாலான மக்களுக்கு உள்ள பிரச்சனைகளிலில் ஒன்று. ஆண், பெண் என இரு பிரிவினர்களும் இந்த உடல் பருமனால் பாதிக்கப்பட்டு அவதி பட்டு வருகின்றனர். இதற்கு பல வகைகளில் தீர்வு உண்டு என்று கூறப்பட்டாலும், அவை ஆபத்து நிறைந்தவையாகவே இருக்கின்றன. அப்படி தான் புதுச்சேரி முத்தியால்பேட்டை நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவருக்கு ஹேமசந்திரன் மற்றும் ஹேமராஜன் என 26 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் ஹேமச்சந்திரன் உடல் பருமனாக இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 256 கிலோ உடைய ஹேமச்சந்திரனுக்கு நேற்று அறுவை சிகிச்சை வயிலாக உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க முடிவு செய்திருந்தனர் மருத்துவர்கள். ஆனால் அறுவை சிகிச்சை தொடங்கி 15 நிமிடங்களில் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
கார்டியாக் அரெஸ்ட் காரணமாக அவர் இறந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த இவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உடல் பருமனை குறைக்க சென்றவர் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த இளைஞரின் உறவினர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்க உத்தரவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Sri Priya Story: தன்னம்பிக்கை கதை.. உடைந்த சிறகும் உயரப் பறந்த பறவையும்
இன்றைய உலகுக்கேற்ற.. நவீன ஆத்திச்சூடி!
புதுச்சேரி பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழி நீக்கம்: திமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு
புதுச்சேரியில் இருந்து இனி 90 மி.லி., மது கொண்டு வந்தாலும் கைது
பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்
படிப்போம்.. பண்படுவோம்.. பயனுற வாழ்ந்திடுவோம்!
காணாமல் போன விஷாலும் காவலர் பேச்சும்.. விஷாலின் விளையாட்டுகள் (13)
Madurai Meenakshi: மாணிக்க மூக்குத்தி.. மதுரை மீனாட்சிக்குக் கல்யாணம்!
பணிநிறைவு பாராட்டு விழா!
{{comments.comment}}