ராமநாதபுரம்: வருகிற 19ம் தேதிக்குப் பிறகுதான் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் என அழைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் தமிழ்ப் புதல்வன் திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் இது நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசும்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பற்றிப் பேசும்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்று கூறி விட்டு இப்போது சொல்லக் கூடாது, 19ம் தேதிக்குப் பிறகுதான் அப்படிச் சொல்ல வேண்டும் என்று கூறி விட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று தொடர்ந்தார்.
ராஜ கண்ணப்பனின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான பேச்சாக, தவறுதலாக உச்சரித்ததாக இதை எடுத்துக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. காரணம், 19ம் தேதிக்குப் பிறகு என்று அவர் தேதியைக் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதைப் பார்த்தால், 19ம் தேதி அமைச்சரவை மாற்றம் நடக்கப் போகிறதா, அன்று துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கப் போகிறாரா என்ற பெரும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜ கண்ணப்பன் வாய் தவறி இதைச் சொல்லியிருந்தாலும் கூட அவரது பேச்சு திமுகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட நாளாகவே உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை திமுகவுக்குள் இருந்து வருகிறது. சீனியர் அமைச்சர்கள் பலரும் கூட இதற்கு ஆதரவாகவே உள்ளனர். இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்லவிருக்கிறார். அந்த சமயத்தில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அதை முதல்வரும் சரி, உதயநிதியும் சரி உறுதிப்படுத்தப்படவில்லை. முதல்வரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால் இன்னும் பழுக்கவில்லை என்று கூறியிருந்தார். உதயநிதியோ, முதல்வருக்கு எல்லா அமைச்சர்களுமே துணையாக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
ஆனால் இன்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் பூனைக்கு மணி கட்டியுள்ளார் என்றே கருத வேண்டியுள்ளது. எது எப்படியோ, 19ம் தேதி ஏதோ ஒன்று நடக்கப் போகுது.. அத்தனை கண்களும் இப்போது உதயநிதி ஸ்டாலின் பக்கம் போகஸ் ஆக ஆரம்பித்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}