சென்னை: 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய ரூ.1056 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டுமென ஏற்கனவே முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி மனு அளித்தார்.
கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் கடந்த 2006 ஆம் ஆண்டு 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. திட்டத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்ற நபர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு நிதியாண்டிலும் இத்திட்டத்தின் கீழ் நூறு நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு தினசரி சம்பளமாக ரூபாய் 294 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் 2024 -25 ஆம் ஆண்டில் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் தினசரி சம்பளமாக ரூபாய் 294 இல் இருந்து,ரூபாய் 312 ஆக ஊதியம் உயர்வு அளித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெற்று வருகின்றனர். அதேபோல் தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியினர் 29 சதவீதம் குடும்பத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த இரண்டு மாதங்களாக ஊதிய நிதி பற்றாக்குறையால் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 14ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தின் நிலுவைத் தொகையான ரூ.1,056 கோடியை விடுவிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதை உடனடியாக விடுவிக்க கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று நேரில் சந்தித்து மனு அளித்தார். இந்த சந்திப்பின்போது திமுக எம்.பி கனிமொழி, ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன் தீப் சிங் பேடி ஆகியோரும் உடனிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்
தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
{{comments.comment}}