சென்னை: இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, டிசம்பர் 26 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடல் மட்டத்திலிருந்து 1.5 கி.மீ உயரத்தில் காணப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, டிசம்பர் 25 வரை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் அல்லது புகைமூட்டம் இருக்கலாம். டிசம்பர் 24 வரை குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 22 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். டிசம்பர் 25 முதல் 27 வரை வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பல இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் வெப்பநிலை பொதுவாக இயல்பாகவே காணப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக கன்னியாகுமரியில் 31.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாக திருப்பத்தூரில் 15.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வானிலை அறிக்கையின்படி, டிசம்பர் 25 வரை டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். மேலும், டிசம்பர் 26 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். டிசம்பர் 27 அன்று உள் தமிழகப் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்னை, புதுச்சேரி, கன்னியாக்குமரி, வேளாங்கண்ணி உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு செல்லும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனல் பறக்கப் போகும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்.. கொழும்பு டி20 போட்டியில் மழை குறுக்கிடுமா?
அற்புதங்கள் நிறைந்த .. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மலைப்பயணம்!
Maha Shivaratri 2026.. இருள் நீங்கும் நேரம்.. மகா சிவராத்திரி!
சிவராத்திரி திருவருள் நாயகனே..... சிங்கார வேலனின் தந்தையே....!
கூட்டணி ஆட்சி பற்றி இனி யாரும் கேட்க மாட்டார்கள்...என்ன ஆர்.எஸ்.பாரதி இப்படி சொல்லிட்டார்?
தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்: மத்திய அமைச்சர் அமித்ஷா
அவர் எல்லாம் ஒரு ஆளா? அதெல்லாம் ஒரு கட்சியா?: நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதிலடி!
40 சீட் கொடுத்தே தீரனும்...மீண்டும் புயலை கிளப்பிய மாணிக்கம் தாகூர்
சாயந்திரம் ஆயிருச்சா.. வாங்க வாழைக்காய் கனவறுவல் செஞ்சு சாப்பிடலாம்!
{{comments.comment}}