புத்தாண்டுக்கு ரெடி ஆவோம்.. தமிழகத்தில்.. டிசம்பர் 30 வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு!

Dec 25, 2023,05:44 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் டிசம்பர் 30ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வட கிழக்குப் பருவ மழை பெரிய அளவில் பெய்து தீர்த்து விட்டது. இனி பெரிய மழைக்கான வாய்ப்பி இருக்கிறதா என்று தெரியவில்லை. இரண்டு பெரும் வெள்ளப் பெருக்கு தமிழ்நாட்டின் வட கோடி மற்றும் தென் கோடி மாவட்டங்கள் சந்தித்து விட்டன.


இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக வரும் 30ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




தமிழக கடலோர பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்,  டிசம்பர் 28 வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  இன்றும், நாளையும் குமரிக்கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது


சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தீஞ்ச சக்தியிலிருந்து ஆட்களை இழுக்கும் நீங்க என்ன.. காஞ்சு போன சக்தியா? .. மு.க. ஸ்டாலின் தாக்கு

news

KG முதல் PG வரை இலவச கல்வி.. ஒடிசா அதிரடியை எல்லோரும் கடைப்பிடிக்கலாமே?

news

தவெக.,வை நோக்கி படையெடுக்கும் மாற்று கட்சியினர்... பலமா? பலவீனமா?

news

டீசல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

news

Vijay Birthday: முதல்வராக முதல் முறையாக.. 52வது பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராகும் விஜய்

news

அதிமுக தேர்தல் தோல்வி எதிரொலி: மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

news

பாஜவிலிருந்து விலகி தவெகவில் இணைகிறார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி

news

லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை வேட்டை எப்போது தொடங்குகிறது?

news

Seven Days, Twenty Kilometres.. மற்றும் மறக்க முடியாத சில நினைவுகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்