ஆண்டிமடம்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே 53 வயதான சரோஜா என்ற பெண் செய்த செயல் அந்தப் பகுதியையே அதிர வைத்துள்ளது. தனது மகளைக் கொன்ற மருமகனை, காத்திருந்து பழி தீர்க்க அவர் செயல்தான் அனைவரையும் அதிர வைத்து விட்டது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வடுகர்பாளையம் மங்கலம் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர்தான் சரோஜா. இவருக்கு வயது 53. இவருடைய கணவர் பழனிவேல். இவர்களுடைய மகள் பிரியா. பிரியாவிற்கும் அதே பகுதியைச்சேர்ந்த பால் வியாபாரி தமிழரசனுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.
கல்யாணம் ஆனதிலிருந்தே கணவன் மனைவிக்கு இடையே ஒத்துவரவில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைதான். தமிழரசனிடம் சிக்கி படாதபாடு பட்டுள்ளார் பிரியா. இந்த நிலையில் ஒரு நாள் வழக்கம் போல மூண்ட சண்டை விபரீதத்தில் முடிந்து விட்டது. பிரியாவை, தமிழரசன் அடித்தே கொன்று விட்டார். போலீஸார் தமிழரசனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் 3 மாதத்திலேயே ஜாமீனில் வெளியே வந்து விட்டார் தமிழரசன்.

இதனால் ஆவேசமடைந்தார் சரோஜா. எனது மகளையும் கொன்று விட்டு இப்போது ஜாமீனில் வந்து விட்டானே என்று மருமகன் மீது தீராக் கோபமடைந்தார். மகள் இல்லாமல் நீ மட்டும் எப்படி வாழ முடியும் என்று வெகுண்ட அவர் மருமகனை போட்டுத் தள்ள முடிவெடுத்தார். சம்பவத்தன்று இரவு தனது மகனின் பேன்ட், டிசர்ட்டை போட்டுக் கொண்டு நள்ளிரவு வாக்கில் தமிழரசன் வீட்டுக்கு கையில் அரிவாளுடன் சென்றார்.
அங்கு வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்துக் கிடந்த தமிழரசனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ஒரு வெட்டு நடுமண்டையில் விழுந்துள்ளது. அவர் அலறித் துடிக்கவே, தமிழரசனின் தாயார் ஓடி வந்து தடுக்கப் பார்த்தார். கொலை வெறியில் இருந்த சரோஜா, அவரையும் சரமாரியாக வெட்டினார். இருவரின் குரல் கேட்டு ஊரே ஓடி வந்து விட்டது.
போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து சரோஜாவைக் கைது செய்தனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தமிழரசனையும், அவரது தாயாரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சரோஜா போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், பாராட்டி, சீராட்டி வளர்த்த எனது மகளை கொலை செய்த தமிழரசன் சிறையில் இருந்து மூன்று மாதங்களில் வெளியே வந்து விட்டார். இது எனக்குப் பொறுக்கவில்லை. எனது மனது ஆறவில்லை. அவனைக் கொன்றால்தான் எனது மகளின் ஆத்மா சாந்தி அடையும் என்று முடிவு செய்து கொலை செய்ய முடிவெடுத்தேன்.
தமிழரசன் வீட்டில் முன்பு கட்டிலில் படுத்து உறங்கிய போது கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தவரிடம் போர்வையை இழுத்து தமிழரசன் தானா என கேட்டேன். அதற்கு அவர் நீங்க யாரு என்று கேட்டார். அதற்கு நான் உன் மாமியார்டா என்று ஆவேசமாக கூறியபடி வெட்டித் தள்ளினேன். தடுக்க வந்த அவரது தாயையும் வெட்டினேன் என்று கூறியுள்ளார்.
மகளின் சாவுக்காக மருமகனை ஆண் வேடத்தில் வந்து நடு ராத்திரியில் சரமாரியாக வெட்டித் தள்ளிய பெண்ணால் ஆண்டிமடமே பரபரப்பாகியுள்ளது.
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
{{comments.comment}}