சென்னை: மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உடல் தகனம் இன்று முழு அரசு மரியாதைகளுடன் நடந்தது.
முன்னதாக எம்.எஸ். சுவாமிநாதன் இறுதிச் சடங்குகளை முழு அரசு மரியாதையுடன் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் சுவாமிநாதன் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார்.
சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூசண், பத்ம விபூசண் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை சுவாமிநாதன் பெற்றுள்ளார்.
உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் -வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதனை கௌரவிக்கும் விதமாக அவரது உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
எம்.எஸ். சுவாமிநாதன் உடல், பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டிலிருந்து, தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பல்வேறு தரப்பினரும் அவரது பூத ஊடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றது. துப்பாக்கிக் குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் நடைபெற்றது.
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
சிந்தனைச் சிதறல்.. பொறுங்கள் பார்க்கலாம் என்ற வார்த்தை.. ஆகச்சிறந்த ஆறுதல்!
இன்னுயிர் நீ என் அருகில் வா!
கோடு தாண்டாத தூரம்!
செலவு போல தீர்ந்து போகும் வாழ்க்கையும் தான்!
பெண் என்பவள்
Short Story: நீக்கறதா.. வேண்டாமா?
{{comments.comment}}