சென்னை: மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உடல் தகனம் இன்று முழு அரசு மரியாதைகளுடன் நடந்தது.
முன்னதாக எம்.எஸ். சுவாமிநாதன் இறுதிச் சடங்குகளை முழு அரசு மரியாதையுடன் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் சுவாமிநாதன் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார்.
சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூசண், பத்ம விபூசண் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை சுவாமிநாதன் பெற்றுள்ளார்.
உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் -வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதனை கௌரவிக்கும் விதமாக அவரது உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
எம்.எஸ். சுவாமிநாதன் உடல், பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டிலிருந்து, தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பல்வேறு தரப்பினரும் அவரது பூத ஊடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றது. துப்பாக்கிக் குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் நடைபெற்றது.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}