முழு அரசு மரியாதையுடன்.. எம்எஸ் சுவாமிநாதன் உடல் தகனம்!

Sep 30, 2023,01:42 PM IST

சென்னை: மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உடல் தகனம் இன்று முழு அரசு மரியாதைகளுடன் நடந்தது.


முன்னதாக எம்.எஸ். சுவாமிநாதன் இறுதிச் சடங்குகளை முழு அரசு மரியாதையுடன் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் சுவாமிநாதன் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார்.


சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூசண், பத்ம விபூசண் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை சுவாமிநாதன் பெற்றுள்ளார்.


உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் -வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதனை கௌரவிக்கும் விதமாக அவரது உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.


எம்.எஸ். சுவாமிநாதன் உடல், பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டிலிருந்து, தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பல்வேறு தரப்பினரும் அவரது பூத ஊடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.


அதன் பின்னர் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம் பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றது. துப்பாக்கிக் குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்