சென்னை: சென்னையில் மாநகர சிறப்பு பேருந்து ஓட்டுநர் நடத்துநர்களுக்கு இன்று மதிய உணவிற்காக ரூ. 50 வழங்கப்பட உள்ளது என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் கொண்டாடுவதற்கு மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் பொங்கலுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. லட்சக்கணக்கான மக்கள் கடந்த நாட்களில் சொந்த ஊர்களுக்குப் பயணமானார்கள். மக்கள் பயணிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகளை இயக்கியது தமிழ்நாடு அரசு.
பேருந்து நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, ஆன்லைன் வாயிலாக புக்கிங் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. அந்த வகையில், இந்த வருடம் 11 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் முன்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சொல்ல ஏதுவாக கூடுதலான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இதனால் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது எளிதானது.

தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகள் புறப்பட்டன. தமிழகம் முழுவதும் மொத்தம் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த சிறப்பு பேருந்துகள் மாதவரம், கே.கே நகர், பூந்தமல்லி, கோயம்பேடு, கிளாம்பாக்கம் போன்ற போன்ற பஸ் நிலையங்களிலிருந்து இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து தினசரி 2100 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், பொங்கலை முன்னிட்டு கூடுதலாக 4,706 சிறப்பு பேருந்துகள் வீதம் மூன்று நாட்களுக்கு மொத்தம் 10,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு சென்னையில் சிறப்பு போருந்துகளை இயக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு ரூ.50 வழங்க போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு அவர்களுக்கு இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எம்டிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ADMK loses another MLA: அதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்
ரஜினிகாந்துடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: காரணம் இது தானா?
தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு
"குதிரை பேரத்திற்கு ஆதாரம் உள்ளதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. தீர்ப்பு தள்ளிவைப்பு!
திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!
திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!
‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
NEET Exams: நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை
{{comments.comment}}